எனவும் வரும்.
[கார்மேகத்தை ஒத்த கொடைத்தன்மையை உடைய ஆய் வள்ளலைக் காணவருக
- என்ற இத்தொடரில், மாரியால் விளையும் பயனும், வண்கையால் விளையும் பயனும்
ஒத்தலின் மாரிவண்கை என்பது பய உவமையாயிற்று.]
"என இவற்றின்" எனப் பொதுப்படக் கூறிய அதனால் பண்பு முதலியனவே
அன்றிச் சொற்பொதுமை காரணமாகவும் வரும். அது சிலேடை உவமை என
முன்னர்க் கூறப்படும்.
இன்னும் அவ்விலேசானே பண்பு முதலிய ஒவ்வொன்றுமே அன்றி,
"கான யானை கைவிடு பசுங்கழை
மீன்எறி தூண்டிலின் நிவக்கும்" - குறுந்.54
எனப் பண்பும் தொழிலும்,
"காந்தள், அணிமலர் நறுந்தாது ஊதும் தும்பி
கைஆடு வட்டின் தோன்றும்" - அகநா. 108
எனத்தொழிலும் வடிவும் வண்ணமும் விரவியும் வருதல் கொள்க.
"விரவியும் வரூஉம் மரபின என்ப" - தொ. பொ. 277
என்பது ஓத்து ஆகலான். இன்னும் அதனானே,
"அடைமறை ஆயிதழ்ப் போதுபோல் கொண்ட
குடைநிழல் தோன்றும்நின் செம்மல்" - கலி. 84
எனப் பலபொருள் விரவி, அடையும்போதும் குடைக்கும்