| முழுதும் - யா. வி. 55 | | | `ஒன்றும் இடைச்சீர் வருஞ்சீ ரொடுமுதற் சீர்கள்தெற்றும் என்றும் அளவடி ஈற்றடி அல்லன; ஈற்றடியும் நன்று மலர்காசு நாள்பிறப் பென்றிற்ற சிந்தடியே; `துன்றும் கடைச்சீர் புகாஎன்பர் வெள்ளையில் தூமொழியே.' | | | - வீ. சோ. 113 | | |
| `வெள்ளைக்கு இயற்சீர் வெண்சீர் விரவி ஏற்கும் அளவடி ஈற்றடி சிந்தடி ஈற்றுச்சீர் அசைச்சீர் உக்குறள் மிகலுமாம்.' | | | - தொ. வி. 220 | | |
| `வெள்ளையுள் பிறதளை விரவா; வெண்டளை ஒன்றாய்ச் செப்பல் ஓசையாம்; அஃதே ஏந்திசை வெண்சீர், இயற்சீர் தூங்கிசை, ஒழுகிசை இரண்டும் உளஎனில் ஆகும்.' | | | - தொ. வி. 221 | | |
| `வெண்பா அளவடி வேண்டப் படுமே.' | | | - மு.வீ. யா.செ.1 | | |
| (19) |
வெண்பாவகை |
729. | குறளே நேரிசை இன்னிசை பஃறொடை சிந்தியல் எனஅஃது ஐந்துஎன மொழிப. | | | | | |
இது மேல் பொதுவகையான் கூறிய வெண்பா வகை இத்துணைத்து என்கின்றது. இ-ள் : குறள் வெண்பாவும் நேரிசை வெண்பாவும் இன்னிசை வெண்பாவும் பஃறொடை வெண்பாவும் சிந்தியல் வெண்பாவும் என்று முற்கூறிய வெண்பா ஐந்து வகைப்படும் என்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு. |
| (20) |
|
விளக்கம் |
குறள் 2 அடி, நேரிசை இன்னிசை 4 அடி, பஃறொடை 5-12 அடி, சிந்தியல் 3 அடி, என அடிபற்றி ஐந்து பகுப்பாக வரையறுத்தவாறு. |