கட
106

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 

 

`நெடுவெண் பாட்டே முந்நால் அடித்தே
குறுவெண் பாட்டின் அளவுஎழு சீரே.ழு
 
 

- தொ. பொ. 470

 

 

`குறள்சிந்து இன்னிசை நேரிசை பஃறொடை
எனஐந் தாகும் வெண்பாத் தானே.ழு
 
 

- யா. வி. 58

 

 

`குறள்சிந்து இன்னிசை நேரிசை சவலை
பஃறொ டைஎன வெண்பா ஆறு.ழு
 
 

 - தொ. வி. 222


20

வெண்பாவகை இலக்கணம்
 

730.

ஈரடி யான்வரின் குறள்; அஃது இரண்டாய்ச்
சீரிய வான்தனிச் சொல்இடை சிவணி
இருவிகற் பானும், ஒருவிகற் பானும்
செப்பல் ஓசையின் சிதையா தாகி
அத்திறம் வரின்நே ரிசை ;அடி நான்காய்
ஒன்றும் பலவும் விகற்பாய்த் தனிச்சொல்
இன்றி நடப்பின் இன்னிசை; அடிபல
துன்னின் பஃறொடை; நேரிசை இன்னிசை
அன்னவாய் மூன்றடி யான்வரின் சிந்தியல்
வெண்பா; ஆதலும் விதிஎனப் படுமே.
 
     
     இது முற்கூறிய வெண்பாக்கள் ஆமாறு கூறுகின்றது.

     இ-ள் : ஈரடியான்வரின் குறள் வெண்பா ஆதலும், அக்குறட்பா இரண்டாய்த்
தொடைக்கு ஏற்ற தனிச் சொல் இடைக்கண் பொருந்தி முதல் இரண்டு அடியும் ஒரு
விகற்பத்தானும் கடை இரண்டு அடியும் ஒரு விகற்பத்தானும் நான்கு அடியும் ஒரு
விகற்பத்தானும்