செய்யுளியல் - நூற்பா எண் 21

115

 

விளக்கம்

     உதாரணப் பாடல்களுக்கு ஒத்த சிதம்பரச் செய்யுட்கோவைப் பாடல்கள் சிறந்த
எடுத்துக்காட்டுக்களாக உளங்கொளத்தக்கன ஆதலின் அவற்றை நிரலே காண்பாம்.

இருவிகற்பக் குறள் வெண்பா :

 

`அறனன்று மாதவ னென்ப துலகெந்தை
தாள்காணார் நாணுக் கொள.'
 
 

- 2

 

ஒருவிகற்பக் குறள் வெண்பா :

 

`பூங்கொன்றைக் கண்ணியான் பொன்மன் றிறைஞ்சிடுக
ஆங்கொன்றைக் கண்ணி யவர்.'
 
 

- 1

 

இருவிகற்ப நேரிசை வெண்பா :

 

`கறையரவுக் கஞ்சுறா தஞ்சுறூஉந் திங்கள்
இறைவி நறுநுதலைக் கண்டு ;- பிறைமுடியோன்
கைம்மான் நடமுவந்த காற்புலிக்கஞ் சாதஞ்சும் ;
அம்மான் விழிமானைக் கண்டு.'
 
 

- 5

 

ஒருவிகற்ப நேரிசை வெண்பா :

 

`திருமுடியில் கண்ணியும் மாலையும் பாம்பு ;
திருமார்பில் ஆரமும் பாம்பு ; - பெருமான்
திருவரையில் கட்டிய கச்சையும் பாம்பு ;
பொருபுயத்தில் கங்கணமும் பாம்பு.'
 
 

- 4

 

இருவிகற்பத்து ஈராசிடை நேரிசை வெண்பா :

 

`நீரில் குமிழி இளமை; நிறைசெல்வம்
நீரில் சுருட்டும் நெடுந்திரைகள் ; - நீரில்
எழுத்தாகும் யாக்கை; நமரங்காள் என்னே?
வழுத்தாத தெம்பிரான் மன்று.'
 
 

- 9