பலவிகற்பத் தின்னிசை வெண்பா : |
| `ஆதி முதலுணர்ந்தியா மன்புசெயப் பெற்றவா, ஓஒ பெரிதும் அரிதே ! எளிதேயோ ! வேதந் துறைசெய்தான், மெய்துணியான், கைதுணிந்தான் ; பேதுற்றும் வெஃகேம் பிற.' | | | - சி. செ. கோ. 13 | | |
இரண்டாமடியிறுதி தனிச்சொல் பெற்று மூன்றுவிகற்பத் தான்வந்த இன்னிசை வெண்பா : |
| `ஆடகச் செம்பொன் அணிமன் றிடங்கொண்ட பாடகச் சீறடியாள் பாகத்தான், - சூடகக்கைக் கங்கையாள் கேள்வன், கழல்தொழூஉக் கைகூப்பி, நின்றிறைஞ்சச் சென்றிறைஞ்சும் கூற்று.' | | | - 15 | | |
மூன்றாமடியிறுதி தனிச்சொல் பெற்று இருவிகற்பத்தான் வந்த இன்னிசை வெண்பா : |
| `காதல் மகளிர் கலக்கக் கலககுண்டு, பேதுற்றார் நெஞ்சும், பிழைத்தகன்றார் நன்னெஞ்சும், போதம் படரும் புலியூரே, - தாதுண்டு, வண்டுறங்கும் நீள்சடையோன் வைப்பு.' | | | - 16 | | |
அடிதொறும் தனிச்சொல் பெற்றுப் பல விகற்பத்தான் வந்த இன்னிசை வெண்பா : |
| `காமர் உயிர்செகுக்கும் கண்ணொன்றே - காமருசீர் மாதர் நலனழிக்கும் கண்ணொன்றே - மாதருக் கின்னா இரவொழிக்கும் கண்ணொன்றே - இந்நிலத்தில் தன்னே ரிலாதான் தனக்கு.' | | | - 17 | | |
ஒருவிகற்பத்து ஐந்தடிப் பஃறொடை வெண்பா : |
| `செக்கர் சடையில் பசுங்குழவி வெண்டிங்காள் ! முக்கண் ஒருவற்கு, நின்னோ டிருசுடரும், ஒக்க விழித்தலால் உய்ந்தேம்; ஒருநீயே அக்கண் ஒருமூன்று மாயின், மற் றுய்வுண்டோ? மைக்கண் மடவார் உயிர்க்கு.' | | | - 18 | | |