பல விகற்பத்து ஏழடிப் பஃறொடை வெண்பா : |
| `வண்டும் சுரும்பும் ஞிமிறும் குடைந்தார்ப்பத் தண்டேன் நிறைக்கும் இதழி நறுங்கண்ணி எண்டோள்முக் கண்ணான் இமயம் புனைமன்றில், அண்டர் கண்களிப்பத் தொண்டர் அகம்குளிர்ப்ப, நின்றாடும் ஆடற் குருகா திருத்திரால் ; வன் திண் மறலி புடைத்துக் கொடிறுடைக்கும் அன்றும் உருகீர்கொல் லாம்.' | | | - சி. செ. கோ. 23 | | |
இரு விகற்ப நேரிசைச் சிந்தியல் வெண்பா : |
| `கம்பக் கரடக் களிற்றின் கபாயணிந்த அம்பொற் புயத்தாற் கமைந்ததால்; - அம்பை முலையானைக் கோடணிந்த மார்பு.' | | | - 25 | | |
ஒரு விகற்ப நேரிசைச் சிந்தியல் வெண்பா : |
| `கங்கைக்குக்கண்மலர் சாத்தக் கருங்குவளை செங்குவளை பூத்தாள் செயல்என்னே? - எங்கோமான் பங்குற்றும் தீராப் பசப்பு.' | | | - 24 | | |
ஒரு விகற்பத்து இன்னிசைச் சிந்தியல் வெண்பா : |
| `போற்றுமின், போற்றுமின், போற்றுமின், போற்றுமின், கூற்றம் குமைக்க வருமுன், நமரங்காள் ! ஏற்றுவந்தான் பொற்றாள் இணை.' | | | - 26 | | |
இருவிகற்பத்து இன்னிசை வெண்பா : |
| `உம்பர் பெருமாற் கொளிர்சடிலம் பொன்பூத்த ; தம்பொற் புயம்வேட்டேம் தார்முலையும் பொன்பூத்த; பொன்பூத்த பூங்கொன்றை சூழ்ந்து.' | | | - 27 | | |
பல விகற்பத்து இன்னிசைச் சிந்தியல் வெண்பா : |
| `கருமிடற்றன், செஞ்சடையன், வெண்ணீற்றன், என்னும், மழுவலத்தன், மானிடத்தன் என்னும்; - உழுவலத்த மன்றுடையான் தார்வேட்ட மான்.' | | | - 28 | | |