120 | இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் | | வெண்பாக்களின் இறுதிச்சீர் நாள், மலர், காசு, பிறப்பு என்ற நான்கனுள் ஒன்றாய் இருத்தலை இக்காட்டிய எடுத்துக் காட்டுக்கள் வாயிலாகவும் உணரலாம். `சுரையாழழு என்ற சிந்தியல் வெண்பாவிற்கு, `கரையாடக் கெண்டை கயமாட மஞ்ஞைழு என்ற முதலடியைக் கூட்டி அதனை இருவிகற்ப நேரிசை வெண்பாவாகக் கொள்வாரும் உளர். | | ஒத்த நூற்பாக்கள் | | `தொடைஒன்று அடிஇரண் டாகி வருமேல் குறளின் பெயர்க்கொடை கொள்ளப் படுமே.ழு | | | - காக்கை. | | | | `ஈரடி இயைந்தது குறள்வெண் பாவே.ழு | | | - அவிநயம் | | | | `ஐம்பெருந் தொடையி னினக்குறள் விகற்பம் செந்தொடை விகற்பொடு செயிர்தீர் ஈரடி.ழு `நேரிசைச் சிந்தும் இன்னிசைச் சிந்துமென்று ஈரடி முக்கால் இருவகைப் படுமே.ழு `இரண்டாம் அடியின் ஈறுஒரூஉ எய்தி, முரண்ட எதுகைய தாகியும், ஆகாதும், இரண்டு துணியாய், இடைதனில் போழ்ந்து, நிரந்தடி நான்கின நேரிசை வெண்பா.ழு | | | - காக்கை. | | | | `குறட்பா இரண்டவை நால்வகைத் தொடையாய், முதற்பாத் தனிச்சொலின் அடிமூய், இருவகை விகற்பினும் நடப்பது நேரிசை வெண்பா.ழு | | | - அவிநயம் | | | | `இருகுறள் நடுவண் தனிச்சொல் பெற்று, இரண்டொன் றாசும் அவணிடை யிட்டு ஒருவிகற் பாகியும் இருவிகற் பாகியும் நிகழ்வன நேரிசை வெண்பா ஆகும்.ழு | | | | | | | | |
|
|