செய்யுளியல் - நூற்பா எண் 21

123

 

 

`ஒன்றைந்தெட் டாகியசீர் ஒத்த எதுகையாய்
நின்றபதின் மூன்றொன்பா னேரொத்து - நன்றியலும்
நீடுசீர் மூவைந்தாம் நேரிசைவெண் பாவென்பர்
நாடுசீர் நாப்புலவர் நன்கு.'
 
 

- வீ. சோ. 114 மேற்.

 

 

`ஒன்றும் பலவும் விகற்பாகி நான்கடியும்
நின்ற தனிச்சொல்தாம், பெற்றும் பெறாதொழிந்தும்
தன்னிசைய நேரிசையில் வேறாய், வருமாகில்
இன்னிசைவெண் பாவாமென் றார்.'
 
 

- வீ. சோ. 114 மேற்.

 

 

`ஈரடி குறளே, இருகுறள் சவலை,
இருகுறள் இடைக்கூன் இயைநே ரிசையே,
நாலடி விகற்ப நடைஇன் னிசையே,
நேரிசை இன்னிசை நேர்மூ வடிசிந்தே,
நாலடி மிக்கடி நண்ணிய பஃறொடை,
எனஅறு வெண்பா ஏற்கும் நடையே.'
 
 

- தொ. வி. 222

 

 

`உரத்தெழு செப்பல் ஓசையைத் தழுவி,
இரண்டடி யாயீற் றடிமுச் சீராய்
ஒருவிகற் பானும், இருவிகற் பானும்,
வருவது குறள்வெண் பாவெனப் படுமே.'
 
 

 - மு. வீ. யா.செ.2

 

 

`இடையில் தனிச்சொல் பெற்றிரு குறளாய்,
ஒருவிகற் பானும், இருவிகற் பானும்,
வருவது நேரிசை வெண்பா ஆகும்.'
 
 

 - மு. வீ. யா.செ.3

 

 

`தனிச்சொல் இன்றி ஒருவிகற் பானும்,
தனிச்சொல் இன்றி இருவிகற் பானும்,
தனிச்சொல் இன்றிப் பலவிகற் பானும்,
தனிச்சொல் பெற்றுப் பலவிகற் பானும்,
தனிச்சொல் மூன்றாம் அடியில் தழுவி
இருவிகற் பானும், வருவதுஇன் னிசையே.'
 
 

 - மு. வீ. யா.செ.4