|
ஈற்றடி ஒருசீர் குறைந்த ஓரொலி வெண்டுறைக்குச் செய்யுள் : |
| `உருவலன், அருவலன், ஒருவன்,மற் றிருவருக்கு அரியவன் எனஉணர்ந் தறைகுநர் அறைகமன்; பரவைதன் மனைவயின், பாவலன் ஏவலின், இருமுறை திரிதலி னெளியனென் றெளியனும் பரவுவன் மன்றம் பணிந்து.' | | | - சி. செ. கோ. 38 | | |
மூன்றடியான் வந்த வெளிவிருத்தத்திற்குச் செய்யுள் : |
| `அங்கட் கமலத் தலர்கமல மேயீரும், - நீரேபோலும் வெங்கட் சுடிகை விடவரவின் மேயீரும், - நீரேபோலும் திங்கட் சடையீரும், தில்லைவனத் துள்ளீரும் - நீரேபோலும்.' | | | - 39 | | |
நான்கடியான் வந்த வெளிவிருத்தத்திற்குச் செய்யுள் : |
| `வெஞ்சமன் அஞ்ச வேலொடு எதிர்ந்தால் - நமரங்காள் அஞ்சல் எனுஞ்சொல் ஆர்சொல வல்லார்? - நமரங்காள் மஞ்சிவர் இஞ்சி மன்றம் இறைஞ்சீர்; நமரங்காள் நஞ்சம் அயின்றவர் நல்குவர் மாதோ! நமரங்காள்.' | | | | | |
ஒத்த நூற்பாக்கள் |
| `ஈரடி முக்கால் இசையினும் தளையினும் வேறுபட் டியல்வன வெண்டா ழிசையே.' | | | | | |
| `தன்பா அடித்தொகை மூன்றாய் இறும்அடி வெண்பாப் புரைய இறுவது வெள்ளையின் தன்பா இனங்களின் தாழிசை ஆகும்.' | | | - காக்கை | | |
| `அடிமூன் றாகி வெண்பாப் போல இறுவன மூன்றே வெள்ளொத் தாழிசை.' | | | - சிறுகாக்கை | | |
| `அடிமூன்றாகி வெண்பாப் போல இறுவ தாயின் வெள்ளொத் தாழிசை. | | | - அவிநயம் | | |
| `ஈரடி முக்கால் இசைகொள நடந்து மூன்றுடன் அடுக்கித் தோன்றின்ஒத் தாழிசை.' | | | - மயேச் | | |