134 | இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் | | | | `கொன்னூர் துஞ்சினும் யாம்துஞ் சலமே; எம்மில் அயலது ஏழில் உம்பர் மயில்அடி இலைய மாக்குரல் நொச்சி அணிமிகு மென்கொம்பு ஊழ்த்த மணிமருள் பூவின் பாடுநனி கேட்டே' | | | - குறுந். 138 | | | என ஏயும், | | `குவளை உண்கண் இவள்வயின் பிரிந்து பெருந்தோள் கதுப்பொடு விரும்பினை நீவி இரங்குமென் றழுங்கல் வேண்டா ; செழுந்தேர் ஓட்டிய வென்றியொடு சென்றீ' | | | - யா. வி. 69 மே. | | | என ஈயும், | | `முள்ளி நீடிய முதுநீர் அடைகரை புள்ளிக் கள்வன் ஆம்பல் அதுக்கும் தண்துறை ஊரன் அளிப்பவும், உண்கண் சிவப்பது எவன்கொல் அன்னாய்!' | | | - யா. வி. 69 மே; ஐங்குறு 21 | | | என ஆயும், | | `அலந்த மஞ்ஞை யாமம் கூவும் புலந்தது மாதோ! புரவலர்க் கிரவென' | | | - யா. வி. 69 மே; பெருங்கதை | | | என எனவும், | | `நின்றன நின்று தன்துணை ஒருசிறைப் பூந்தண் சிலம்பன் தேந்தழை இவைஎனக் காட்டவும், காண்டல் செல்லாள், கோட்டுப் பூண்முலை நோக்கி, இறைஞ்சி, வாண்முக எருத்தம் கோட்டினள், மடந்தை' | | | - யா. வி. 69 மே. | | | என ஐயும் ஈறாயவாறு காண்க. பிறவும் வந்துழிக் கண்டுகொள்க. | (23) | | |
|
|