|
| `நேர்ஒன்று ஆசிரி யத்தளை யான்வரல் நேரிசை அகவல் எனப்படும் எனலே.' | | | - மு.வீ.யா.செ. 31 | | |
| `நிரைஒன்று ஆசிரி யத்தளை யான்வரல் தூங்கிசை அகவல் எனச்சொலப் படுமே.' | | | - 32 | | |
| `இவ்விரு தளையும் பிறவும் மயங்கி வருவது ஒழுகிசை யாம்வழுத் திடினே' | | | -33 | | |
ஆசிரியப்பா வகை |
733. | நேரிசை இணைக்குறள் நிலைமண் டிலமே அடிமறி மண்டிலம் எனநான்கு அகவல். | | | | | |
இது மேல் பொதுவகையான் கூறிய ஆசிரியப்பாவகை இத்துணைத்து என்கின்றது. இ-ள் : நேரிசை ஆசிரியப்பாவும் இணைக்குறள் ஆசிரியப்பாவும் நிலைமண்டில் ஆசிரியப்பாவும் அடிமறி மண்டில ஆசிரியப்பாவும் என நான்கு வகைப்படும் ஆசிரியப்பா என்றவாறு. |
ஒத்த நூற்பாக்கள் |
| `நேரிசை இணைநிலை மண்டிலம் மண்டிலம் ஈரிரண்டு இயல எண்ணுங் காலை.' `நேரிசை இணைக்குறள் மண்டில நிலைப்பெயர் ஆகுமண் டிலமுமென்று அகவல் நான்கே.' | | | - யா. வி. 70 | | |
| `ஆசிரி யத்துஒலி அகவலாய் இயற்சீர் தன்தளை பிறவும் தழுவிய அளவடி நடையான் நடந்து நால்வகைத் தாம்அவை நேரிசை இணைக்குறள் நிலைமண் டிலமே அடிமறி மண்டிலம் ஆகும் என்ப.' | | | - தொ. வி. 223 | | |
24 |