செய்யுளியல் - நூற்பா எண் 25

139

 
  நரந்தம நாறும் தன்கையால்
புலவு நாறும் என்தலை தைவரும் மன்னே;
அருங்கலை இரும்பாணர் அகல்மண்டைத் துளைஉரீஇ,
இரப்போர் கையுளும் போகி,
புரப்போர் புன்கண் பார்வை சோர்தர,
அஞ்சொல் நுண்தேர்ச்சிப் புலவர் நாவில்
சென்றுவீழ்ந் தன்று;அவன்
திருநிறத்து இயங்கிய வேலே;
ஆசுஆகு எந்தை யாண்டுஉளன் கொல்லோ?
இனி, பாடுநரும் இல்லை;
பாடுநர்க்கு ஒன்று ஈகுநரும் இல்லை;
பனித்துறைப் பகன்றை நறைக்கொள் மாமலர்
சூடாது வைகி யாங்கு, பிறர்க்கொன்று
ஈயாது வீயும் உயிர்தவப் பலவே'
 
 

- யா. கா. 29 மே; புறநா. 255

 
என்றும்,

நிலைமண்டில ஆசிரியப்பாவிற்குச் செய்யுள் :

  `வேரல் வேலி வேர்க்கோள் பலவின்
சாரல் நாட! செவ்வியை ஆகுமதி;
யார்அஃது அறிந்திசி னோரே? சாரல்
சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கி யாங்கிவள்
உயிர்தவச் சிறிது; காமமோ பெரிதே'
 
 

- யா. கா. 29 மே; குறுந். 18

 
எனவும்,

டிமறிமண்டில ஆசிரியப்பாவிற்குச் செய்யுள் :

  `சூரல் பம்பிய சிறுகான் யாறே;
சூர்அர மகளிர் ஆர்அணங் கினரே;
வாரல் எனினே யான்அஞ் சுவலே;
சாரல் நாட நீவரல் ஆறே'
 
 

- யா. கா. 29 மே.

 

(25)