146

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 

இடைஇடை குறைந்து இடைமடக்காய் வந்த ஆசிரியத்துறைக்குச்
செய்யுள் :

 

சென்றார்ந் தமைந்த சிறுநுதி வள்உகிர்ப்
     பொறிஎருத்து எறுழ்வலிப் புலவுநாறு அழல்வாய்ப்
     புனலாமெனக் கனலாமெனப்
     புகையா நின்றன புலிமான் ஏற்றை;

என்றாங்கு இவைஇவை இயங்கலின் எம்திறத்து
     இனிவரல் வேண்டலம், தனிவரல், எனத்தலை
     விலக்கலின், இறுவரை மிசைஎறி குறும்பிடை
     இதுஎன் என,அது நோனார்கரவிர விடைக்களவு
     உளமது கற்றோரது கற்பன்றே'
 
 

 - யா. கா. 30 மே.

 
எனவும்,

எருத்தடி குறைந்து இடைமடக்காய் வந்த ஆசிரியத் துறைக்குச் செய்யுள்:

 

`வண்டுளர் பூந்தார் வளங்கெழு செம்பூட்செய்
     வடிவே போல,
தண்தளிர்ப்பூம் பிண்டித் தழைஏந்தி, மாவினவித்
     தணந்தோன் யாரே?
தண்தளிர்ப் பூம்பிண்டித் தழைஏந்தி வந்துநம்
பண்டைப் பதிவினவிப் பாங்குபட மொழிந்து
     படர்ந்தோ னன்றே'
 
 

- யா. கா. 30 மே.

 
எனவும,்

 

`இரங்கு குயில்முழவா, இன்னிசையாழ் தேனா,
அரங்கம் அணிபொழிலா ஆடும்போலும் இளவேனில்,
அரங்கம் அணிபொழிலா ஆடு மாயின்,
மரங்கொல்? மணந்தகன்றார் நெஞ்சம்என்
     செய்த திளவேனில்?
 
 

 - யா. கா. 30 மே.

 
எனவும்,