அறுசீர்க் கழிநெடில் அடியான் வந்த ஆசிரிய விருத்தத்திற்குச் செய்யுள்: |
| `விடஞ்சூழ் அரவின் இடைநுடங்க, மின்வாள் வீசி, விரையார்வேங் கடஞ்சூழ் நாடன் காளிங்கன் கதிர்வேல் பாடும் மாதங்கி; வடஞ்சேர் கொங்கை மலைதாந்தாம், வடிக்கண் நீல மலர்தாந்தாம், தடந்தோள் இரண்டும் வேய்தாந்தாம், என்னும் தன்கைத் தண்ணுமையே.' | | | | | |
எனவும் வரும். ஒழிந்த கழிநெடில் அடியான் வந்த ஆசிரிய விருத்தங்கட்குச் செய்யுள் கழிநெடிலடிக்கு முன்னர்க் காட்டியவே கொள்க. (பக். 73, 74) பிறவும் வந்துழிக் காண்க. |
விளக்கம் |
சிதம்பரச் செய்யுட் கோவைப் பாடல்களை நோக்குவோம். |
ஒரு பொருள்மேல் மூன்று அடுக்கி வந்த ஆசிரியத் தாழிசைக்குச் செய்யுள் : |
| `சிற்றம் பலத்து நடிக்கும் சிவபெருமான் கற்றைச் சடைக்கு முடிக்கும் சுடர்த்திங்கள் மற்றப் புனல்மங்கை வாணுதலை ஒக்குமால்.' `பேரம் பலத்து நடிக்கும் சிவபெருமான் வார்செஞ் சடைக்கு முடிக்கும் சுடர்த்திங்கள் நீர்மங்கை கொங்கைக்கு நித்திலக்கச் சொக்குமால்.' `பொன்னம் பலத்து நடிக்கும் சிவபெருமான் மின்னும் சடைக்கு முடிக்கும் சுடர்த்திங்கள் அந்நங்கை செங்கைக்கு அணிவளையும் ஒக்குமால்.' | | | - சி. செ. கோ. 47 | | |