148

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 

தனியே வந்த ஆசிரியத்தாழிசைக்குச் செய்யுள் :

 

`சத்தமும் ஆகிஅச் சத்தத் தாற்பெறும்
அத்தமும் ஆகலின் அநந்தன் கண்களே
உத்தமன் ஐந்தெழுத் துருவம் காண்பன.'
 
 

 - சி.செ.கோ. 46

 

எருத்தடி குறைந்த ஆசிரியத் துறைக்குச் செய்யுள் :

 

`நாகம் பொதிசடைமேல் நாள்மதியும் வாள்மதிபோல்
     நங்கை கங்குல்
மேகம்செய் கூந்தல் மிலைச்சும் தலைக்கலனும்
     விளங்கும் தோற்றம்
ஆகம் பகுந்தளித்த அந்நாளில் அம்பலத்தான்
மாகம் பதியும் மதியும் பகுந்தளித்த வண்ணம் போலும்'
 
 

- 48

 

இடைஇடை குறைந்து வந்த ஆசிரியத் துறைக்குச் செய்யுள் :

 

`உண்டாங் கெனினும் இலதென் றறிஞர்கள்
     பொய்யெனப் புகலவும் மெய்யெனப் பெயர்பெற்று
     உன்னாமுனம் இன்னாமென உளதாய்
     மாய்வது நிலையில் யாக்கை;

கண்டாங் கிகழும் கிழமுதிர் அமையத்து
     ஐவளி பித்தெனும் மெய்தரும் வித்தில்
     கடலில் திரையென உடலில் திரையொடு
     கலியா நின்றன நலிவுசெய் நோய்கள்;

புண்தாங் கயில்முக் குடுமிப் படையொடும்
     எயிறலைத் தழல்விழித் துயிருணக் கனல்சேர்
     புகையாமென நிழலாமெனத் திரியாநின்றது
கொலைசெய் கூற்றம்.

விண்டாங் ககலுபு மெய்ப்பொருள் துணிவோர்
     மின்பொலி பொன்புனை மன்றிலெம் உயிராம்
     விமலன் குஞ்சித கமலம் கும்பிட
     வேண்டுவர் வேண்டார் விண்மிசை உலகே.'
 
 

- 50

 

(முதலடியும் மூன்றாமடியும் 14 சீர் - ஏனை இரண்டும் 16 சீர்)