செய்யுளியல் - நூற்பா எண் 26

149

 

எருத்தடி குறைந்து இடைமடக்காய் வந்த ஆசிரியத் துறைக்குச் செய்யுள்:

  `மாயிரு ஞாலத்து மன்னுயிர் கண்களிப்ப
     மன்று ளாடும்
நாயகன் கண்டம் கறுத்தன்றே பொன்னுலகை
     நல்கிற் றம்மா,
நாயகன் கண்டம் கறாதேலந் நாட்டமரர்
சேயிழை மாதருக்குச் செங்கைகளும் கொங்கைகளும்
     சிவக்கும்போலும்.'
 
 

- சி. செ. கோ. 51

 

இடைஇடை குறைந்து இடைமடக்காய் வந்த ஆசிரியத் துறைக்குச் செய்யுள் :

  `திங்கட் சடைக்கற்றைப் புத்தேள் திருமார்பில்
பைங்கண் தலைகள் பலவும் நகுவ போலுமால்;
பைங்கண் தலைகள் பலவும் நகுவகண்டு,
அங்கட் கமலத்து அயனும் மாலும் அழுவரால்'
 
 

- 51

 
(இது முதலடியும் மூன்றாமடியும் நாற்சீர், ஏனைய ஐஞ்சீர் பெற்று இடைமடக்காய்
வந்தது.)

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்:

  `கனம ளித்தபைங் காவில்வெண் டரளமும்
     பவளமும் கமகீனப்
புனம ளித்தபூங் கொன்றைபொன் சொரிதரப்
     புண்ணிய மலர்தில்லை
வனம ளித்ததே எனினுமோ ரானந்த
     மாக்கடற் றிளைத்தாடும்
அனம ளித்தஏழ் பொழிற்குமோர் பலமென்ப
     தன்பொனம் பலந்தானே,'
 
 

- 52