150

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 
ஒன்பதின்சீர்க் கழிநெடிலடியான்வந்த ஆசிரிய விருத்தம் :

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் :

 

`கோமுனிவ ருக்குமரி தாய்முது மறைப்பனுவல்
     கூறிய பரப்பி ரமமாம்
ஓம்எனும் எழுத்தின்வடி வாய்,நடம் நவிற்றுபுலி
     ஊரன்,மகு டச்ச டிலமேல்
மாமதி யினைத்தனது கோடென எடுப்ப,மத
     மாமுகன் முகக்கை தொடர,
தூமதி பணிப்பகை எனாவர நதிப்புக,வொர்
     தோணி எனவிட் டகலுமே.ழு
 
 

 - சி. செ. கோ. 53

 

எண்சீர்க் கழிநெடியான்வந்த ஆசிரிய விருத்தம் :

 

`அருவருக்கும் உலகவாழ் வடங்க நீத்தோர்க்கு,
     ஆனந்தப் பெருவாழ்வாம் ஆடல் காட்ட,
மருஅருக்கள் மதிவளிவான் யமானன் தீநீர்
     மண்எனும்எண் வகைஉறுப்பின் வடிவு கொண்ட
ஒருவனுக்கும், ஒருத்திக்கும் உருவொன் றால்அவ்
     வுருவைஇஃ தொருத்தனென்கோ, ஒருத்தி என்கோ
இருவருக்கும் உரித்தாக ஒருவர் என்றோர்
     இயற்சொலில தெனின்,யான்மற் றென்சொல் கேனேழு
 
 

54

 

 

`வளங்கு லாவரும் அணங்க னார்விழி
     மயக்கி லேமுலை முயக்கி லேவிழு மாந்தர்காள் !
களங்கு லாமுட லிறந்து போயிடு
     காடு சேர்முளம், வீடு சேர்வகை கேண்மினோ !
துளங்கு நீள்கழல் தழங்க ஆடல்செய்
     சோதி யானணி பூதி யானுமை பாதியான்,
விளங்கு சேவடி உளங்கொ ளீர் ! யமன்
     விடுத்த பாசமும், அடுத்த பாசமும், விலக்குமே !ழு
 
 

- 55