160 | இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் | | | | `எள்ளனைத்தும் இடரின்றி எழில்மாண்ட பொன்னெயில் உள்ளிருந்த உன்னையே உறுதுணையென் றடைந்தோரை, வெள்ளில்சேர் வியன்காட்டுள் உறைகென்றல் விழுமிதோ?ழு `குணங்களின் வரம்பிகந்து கூடிய பன்னிரண்டு கணங்களும்வந் தடியேத்தக் காதலித்துன் னடைந்தோரை, பிணம்பிறங்கு பெருங்காட்டு ளுறைகென்றல் பெருமையோ?ழு `விடத்தகைய வினைநீக்கி வெள்வளைக்கைச் செந்துவர்வாய் மடத்தகைய மயிலனையார் வணங்கநின் னடைந்தோரை, தடத்தகைய காடுறைக என்பதுநின் தகுதியோ ?ழு | | | [இவை மூன்றும் தாழிசை] | | | | | `எனைத்துணையை ஆயினும் ஆக,மற்று உன்கண் தினைத்துணையும் தீயவை இன்மையின், சேர்தும்; வினைத்தொகையை வீட்டுக என்றுழு | | | [இது சுரிதகம்] - யா.கா.31 மே. | | | என வரும், | ஆசிரியச்சுரிதகத்தால் இற்றநேரிசை ஒத்தாழிசைக் கலிப்பாவிற்குச் செய்யுள்: | | `வாள்நெடுங்கண் பனிகூர, வண்ணம்வே றாய்த்திரிந்து, தோள்நெடுந் தகைதுறந்து, துன்பங்கூர் பசப்பினவாய்ப் பூண்ஒடுங்கு முலைகண்டும், பொருட்பிரிதல் வலிப்பவோ?ழு | | | [இது தரவு] | | | | `சூருடைய கடுங்கடங்கள் செலற்கரிய என்பவால், பீருடைய நலந்தொலையப் பிரிவாரோ? பெரியவரே! `சேணுடைய கடுங்கடங்கள் செலற்கரிய என்பவரால் நாணுடைய நலந்தொலைய நடப்பாரோ? நலமிலரே!ழு `சிலம்படைந்த வெங்கானம் சீரிலவே என்பவால்: புலம்படைந்து நலந்தொலையப் போவாரே? பொருளிலரே!ழு | | | [இவை மூன்றும் தாழிசை] | | | | |
|
|