செய்யுளியல் - நூற்பா எண் 29 | 161 | | | | `அருள்எனும் இலராய்ப் பொருள்வயின் பிரிவோர், பன்னெடுங் காலமும் வாழியர் ! பொன்னெடுந் தேரோடு தானையின் பொலிந்தே,' | | | [இது சுரிதகம்] - யா. கா. 31 மே. | | | என வரும். எட்டும் பதினாறும் குறையாது வந்த அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பாவிற்குச் செய்யுள் வந்துழிக்காண்க. - [தொ. பொ. 458 பே. யா. வி. 83 உரை நோக்குக] எட்டும் பதினாறும் குறைந்து நான்கும் எட்டுமாய் வந்த அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பாவிற்குச் செய்யுள் : | | `கெடலறு மாமுனிவர் கிளர்ந்துடன் தொழுதேத்த, கடல்கெழு கனைசுடரின் கலந்தொளிரும் வாலுளைய அழலவிர் சுழல்செங்கண் அரிமாவாய், மலைந்தானை, தாரொடு முடிபிதிரத் தமனியப் பொடிபொங்க, ஆர்புனல் இழிகுருதி அகலிடம் உடன்நினைப்ப, கூர்உகிரான் மார்பிடந்த கொலைமலி தடக்கையோய்!' | | | [இது தரவு] | | | | `முரசதிர் வியன்மதுரை முழுவதூஉம் தலைபனிப்பப் புரைதொடித் திரள்திண்தோள் போர்மலைந்த மறமல்லர் அடியொடு முடிஇறுப்புண் டயர்ந்தவர் நிலம்சேரப் பொடிஎழ வெங்களத்துப் புடைத்ததுநின் புகழாமோ?' `கலிஓலி வியன்உலகம் கலந்துடன் நனிநடுங்க, வலிஇயல் அவிர்ஆழி மாறெதிர்ந்த மருட்சோர்வும் மாணாதார் உடம்போடு மறம்பிதிர எதிர்கலக்கிச் சேணுயர் இருவிசும்பில் சேர்த்ததுநின் சினமாமோ?' 'படுமணி யினநிரைகள் பரந்துடன் இரிந்தோடக் கடுமுரண் எதிர்மலைந்த காரொலி எழிலேறு | | | | | | |
|
|
|