|
| வெரிநொடு மருப்பொசிய வீழ்ந்துநிறம் வேறாக எருமலி பெருந்தொழுவின் இறுத்ததுநின் இகலாமோ?' | | | [இவை மூன்றும் தாழிசை] | | |
| `இலங்கொளி மரகதம் எழில்மிகு வியன்கடல்' வலம்புரித் தடக்கையின் மாஅல்! நின்நிறம்;' `விரிஇணர்க் கோங்கமும் வெந்தெரி பசும்பொனும், பொருகளிறு அட்டோய்! புரையும் நின்உடை;' | | | [பேரெண்] | | |
இவை நாற்சீர் அடி இரண்டு அம்போதரங்கம். |
| `கண்கவர் கதிர்முடி கனலும் சென்னியை; தண்சுடர் உறுபகை தவிர்த்த ஆழியை; ஒலிஇயல் உவணம் ஓங்கிய கொடியினை; வலிமிகு சகடம் மாற்றிய அடியினை; | | | [அளவெண்] | | |
இவை நாற்சீர் ஓர்அடி நான்கு அம்போதரங்கம். |
| `போர்அவுணர்க் கடந்தோய் நீஇ; புணர்மருதம் பிளந்தோய் நீஇ; நீரகலம் அளந்தோய் நீஇ; நிழல்திகழைம் படையோய் நீஇ;' | | | [இடை எண்] | | |
இவை முச்சீர் ஓரடி நான்கு அம்போதரங்கம். |
| `ஊழி நீஇ; உலகு நீஇ; உறவு நீஇ; அருவு நீஇ; ஆழி நீஇ; அருளும் நீஇ; அறமும் நீஇ; மறமும் நீஇ; ` | | | [சிற்றெண்] | | |
இவை இருசீர் ஓர்அடி எட்டு அம்போதரங்கம் |
|
|