செய்யுளியல் - நூற்பா எண் 29

163

 
  `அடுதிறல் ஒருவ !நிற் பரவுதும்; எங்கோன்
தொடுகழல் கொடும்பூண் பகட்டெழில் மார்பின்
கயலொடு கலந்த சிலையுடைக் கொடுவரிப்
புயல்உறழ் தடக்கைப் போர்வேல் அச்சுதன்
தொன்று முதிர்கடல் உலகம்
ஒன்றுபுரி திகிரி உருட்டுவோன் எனவே,'
 
 

 - யா,கா, 31 மே.
[இது சுரிதகம்]

 
என வரும்,

     ஆறு உறுப்பும் குறையாது வந்த வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பாவிற்குச் செய்யுள்

  `விளங்குமணிப் பசும்பொன்னின் விரித்தமைத்துக் கதிர்கான்று
துளங்குமணிக் கனைகழற்கால் துறுமலர் நறும்பைந்தார்ப்
பரூஉத்தடக்கை மதயானைப் பணைஎருத்தின் மிசைத்தோன்றும்
குரூஉக்கொண்ட மணிப்பூணோய்! குறைஇரந்த முன்னாள்கண்
மாயாத வனப்பினையாய் மகிழ்வார்க்கும் அல்லார்க்கும்
தாயாகித் தலைஅளிக்கும் தண்துறை ஊர ! கேள் !
 
 

[இது தரவு]

 
  காட்சியால் கலப்பெய்தி எத்திறத்தும் கதிர்ப்பாகி
மாட்சியால் திரியாத மரபொத்தாய்; கரவினால்
பிணிநலம் பெரிதெய்திப் பெருந்தடந்தோள் வனப்பழிய
அணிநலம் தனியேவந்து அருளுவதும் அருளாமோ'

`அன்பினால் அமிழ்தளைஇ அறிவினால் பிறிதின்றிப்
பொன்புனை பூணாகம் பசப்பெய்தப் பொழிலிடத்துப்
பெருவரைத்தோள் அருளுதற் கிருளிடைத் தமியையாய்க்
கருவரைத்தோள் கதிர்ப்பிக்கும் காதலும் காதலோ?'

`பாங்கனையே வாயிலாப் பலகாலும் வந்தொழுகும்
தேங்காத கரவினையும் தெரியாத இருளிடைக்கண்
குடவரைவேய்த் தோளிணைகள் குளிர்ப்பிப்பான் தமியையாய்த்
தடமலர்த்தாள் அருளும்நின் தகுதியும் தகுதியோ ?'
 
 

[இவை மூன்றும் தாழிசை]