| `செல்வப்போர்.....ஒளித்ததே' எனவும | | | - பக்கம் 154 | | |
| தனிச்சொல் பெற்றுச் சுரிதகத்தால் இற்ற தரவு கொச்சகக்கலிப்பாவிற்குச் செய்யுள் : `குடநிலைத் தண்புறவில்......சென்ற வாறே' | | | - பக்கம் 154 | | |
எனவும் வரும். |
இடையிடைத் தனிச்சொல் பெற்றுச் .சுரிதகத்தால் இற்ற தரவிணைக் கொச்சகக்கலிப்பாவிற்குச் செய்யுள் : |
| `வடிவுடை நெடுமுடி வானவர்க்கும் வெலற்கரிய கடிபடு நறும்பைந்தார்க் காவலர்க்கும் காவலனாம் கொடிபடு வரைமாடக் கூடலார் கோமானே!' | | | - பக்கம் 154 | | |
இது தரவு. |
|
| `துணைவளைத்தோள் இவள்மெலியத் தொன்னலம் தொலைப்புண்டாங்கு இணைமலர்த்தார் அருளுமேல், இதுஇதற்கோர் மாறென்று, துணைமலர்த் தடங்கண்ணார் துணையாகக் கருதாரோ?' | | | - பக்கம் 154 | | |
இது தரவு, |
|
| `செவ்வாய்ப் பேதை இவள்திறத்து எவ்வா றாங்கொலிஃ தெண்ணிய வாறே.' | | | - யா. கா. 33 மே. [இது சுரிதகம்] | | |
என வரும். |
இடையிடைத் தனிச்சொல் பெற்றுவந்த சிஃறாழிசைக் கொச்சகக்கலிப்பாவிற்குச் செய்யுள்: |
| `பரூஉத்தடக்கை மதயானைப் பணைஎருத்தின் மிசைத்தோன்றிக் குரூஉக்கொண்ட வெண்குடைக்கீழ்க் குடைமன்னர் புடைசூழப் படைப்பரிமான் தேரினொடும் பரந்துலவு மறுகினிடைக் கொடித்தானை இடைப்பொலிந்தான் கூடலார் கோமானே.' | | | | | |
என வரும். |
வேற்றுத்தளை தட்டிவந்த பெண்கலிப்பாவிற்குச் செய்யுள் : |
| `ஏர்மலர் நறுங்கோதை எருத்தலைப்ப இறைஞ்சித்தண் வார்மலர்த் தடங்கண்ணார் வலைப்பட்டு, வருந்தியஎன் தார்வரை மகன்மார்பன் தனிமையை அறியுங்கொல்? சீர்மலி கொடியிடை சிறந்து' | | | - யா. கா. 32 மே. | | |
இது தரவு. |
|