168

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 
 

ஆங்கு ஒருசார்

 
 

[தனிச்சொல்]

 
  `உச்சியார்க் கிறைவனாய் உலமெலாம் காத்தளிக்கும்
பச்சையார் மணிப்பைம்பூண் புரந்தரனாப் பாவித்தார்:
வச்சிரம் காணாத காரணத்தான் மயங்கினரே.ழு

              ஆங்கு ஒருசார்
 
 

[தனிச்சொல்]

 
  `அக்காலம் அணிநிரைகாத்து அருவரையால் பனிதவிர்த்து
வக்கிரனை வடிவழித்த மாயவனாப் பாவித்தார்;
சக்கரம் காணாத காரணத்தால் சமழ்த்தனரே.ழு

              ஆங்கு ஒருசார்
 
 

[தனிச்சொல்]

 
  `மால்கொண்ட பகைதவிர்ப்பான் மாத்தடிந்து மயங்காச்செங்
கோல்கொண்ட சேவலங் கொடியவனாப் பாவித்தார்;
வேல்கொண்டது இன்மையால் விம்மிதராய் நின்றனரே.ழு
 
     
இவை மூன்றும் தாழிசை.
 

அஃதான்று

 
 

[தனிச்சொல்]

 
  `கொடித்தேர்த் தோன்றல், கொற்கைக் கோமான்,
நின்றபுகழ் ஒருவன், செம்பூட் சேஎய்!
என்றுநனி அறிந்தனர் பலரே; தானும்
ஐவருள் ஒருவனென் றறிய லாகா
மைவரை யானை, மடங்கா வென்றி
மன்னவன், வாழி,என் றேத்தத்
தென்னவன் வாழி !திருவொடும் பொலிந்தேழு
 
 

[இது சுரிதகம்]
- யா. கா. 33 மே.

 
என வரும்.

தனிச்சொல் இன்றிவந்த பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பாவிற்குச்
செய்யுள் :

  `தண்மதிஏர் முகத்தாளைத் தனியிடத்து நனிகண்டாங்கு
உண்மதியும் உடைநிறமும் உடன்தளர முன்னாள்கண்