| கண்மதிஓர்ப் பிவையின்றிக் காரிகையை நிறைகவர்ந்து, பெண்மதியின் மகிழ்ந்தநின் பேரருளும் பிறிதாமோ?' | | | [இது தரவு] | | |
| `இளநலம் இவள்வாடத் தரும்பொருட்குப் பிரிவாயேல் தளநல முகைவெண்பல் தாழ்குழல் தளர்வாளோ?' `தகைநலம் இவள்வாடத் தரும்பொருட்குப் பிரிவாயேல் வகைநலம் இவள்வாடி வருந்திஇல் இருப்பாளோ ?' அணிநலம் இவள்வாட அரும்பொருட்குப் பிரிவாயேல் மணிநல மகிழ்மேனி மாசோடு மடிவாளோ ?' `நாம்பிரியேம் இனிஎன்று நறுநுதலைப் பிரிவாயேல் ஓம்பிரியோம் எனஉரைத்த உயர்மொழியும் பழுதாமோ' `குன்றளித்த திரள்தோளாய்! கொய்புனத்தில் கூடியநாள் அன்றளித்த அருள்மொழியால் அருளியதும் பழுதாமோ?' `சில்பகலும் ஊடியக்கால் சிலம்பொலிச்சீ றடிபரவுப் பல்பகலும் தலையளித்த பணிமொழியும் பழுதாமோ?' | | | [இவை ஆறும் தாழிசை] | | |
|
| `அரும்பெறல் அமிழ்தினும் தரும்பொருள் அதனினும் பெரும்பெறல் அரிதிவள் வெறுக்கையும் அற்றே; அதனால், விழுமியது அறிமதி வாழி கெழுமிய காதலின் தரும்பொருள் சிறிதே.' | | | - யா. கா. 33 மே. [இது சுரிதகம்] | | |
கலிக்கு ஓதப்பட்ட ஆறு உறுப்பும் மிக்கும் குறைந்தும் பிறழ்ந்தும் வந்து மயங்கிய மயங்கிசைக் கொச்சகக்கலிப்பாவிற்குச் செய்யுள் : |
| `அணிகிளர் மணிமுடி மாயவனும் தம்முனும்போல் தணிகிளர் நெடுங்கடலும் கானலும் தோன்றுமால்; நுரைநிவந் தவையன்ன நொய்ப்பறைய சிறைஅன்னம் இரைநயந் திறைகூரும் ஏமஞ்சால் துறைவு ! கேள்.' | | | | | |