செய்யுளியல் - நூற்பா எண் 29

171

 
  `தாங்காது கழலும்எண் தகைவளையும் தவிர்ப்பாய்மன்;
நீங்காது பெருகும்என் நெஞ்சமும் நிறுப்பாயோ?'

`மறவாத அன்பினேன் மனன்நிற்கு மாறுரையாய்;
துறவாத தமருடையேன் துயர்தீரு மாறுரையாய்;'

`காதலார் மார்பன்றிக் காமக்கு மருந்துரையாய்;
ஏதிலார் தலைசாய யான்உய்யு மாறுரையாய்;'

`இணைபிரிந்தார் மார்பன்றி இன்பக்கு மருந்துரையாய்;
துணைபிரிந்த தமருடையேன் துயர்தீரு மாறுரையாய்;'
 
 

 [இவை ஆறும் தாழிசை]

 
 

என ஆங்கு

 
 

 [தனிச்சொல்]

 
  பகைபோன்றது துறை;
பரிவாயின குறி;
நகைஇழந்தது முகம்;
நனிநாணிற்று உளம்;
தகைஇழந்தன தோள்;
தலைசிறந்தது துயர்;
புகைபரந்தது மெய்;
பொடியாயிற்றென் உயிர்;
 
     
இவை இருசீர் ஓர்அடி எட்டு அம்போதரங்கம்.
 

அதனால்

 
 

 [தனிச்சொல்]

 
  `இனையது நிலையால், அனையது பொழுதால்,
நினையல், வாழி, தோழி, துனைவரல்
பனியொடு கழிக உண்கண்;
என்னொடு கழிக இத் துன்னிய நோயே.'
 
 

[இது சுரிதகம்]

 
என வரும்.

சுரிதகம் இடைஇடை வந்த கொச்சகச் செய்யுளும், வெண்பாவினோடும்
ஆசிரியத்தினோடும் மயங்கி வந்த மயங்கிசைக் கொச்சகச் செய்யுளும் வந்துழிக் காண்க.
(கலித்தொகை 39)
(29)