|
விளக்கம் |
நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பாவிற்குச் செய்யுள் : |
| `கொன்செய்த கலைஅங்குல் கொலைசெய்த மதர்வேற்கண் மின்செய்த சிறுமருங்குல் பெருந்தேவி விழிகுளிர்ப்பப் பொன்செய்த மணிமன்றில் நடம்செய்த புகழோய்!கேள்.' | | | [இது மூவடித் தரவு] | | |
| `முருகுயிர்க்கும் நறுந்தெரியல் மொய்குழலின் மையுண்கண் பொருகயற்குன் திருமேனி புதுவெள்ளப் புணரியே.' `தேன்மறிக்கும் வெறித்தொங்கல் அறற்கூந்தல் திருந்திழைகண் மான்மறிக்குள் திருமேனி மலர்முல்லைப் புறவமே,' `பிறையளிக்கும் சிறுநுதலப் பெண்ணமுதின் பேரமர்க்கண் சிறைஅளிக்குன் திருமேனி தேனளிக்கும் பொதும்பரே.' | | | [இவை மூன்றும் தாழசை] | | |
|
| `மதுவிரி கோதை மடவரற் கம்ம புதுவிருந் துண்ண உண்ண அதிசயம் விளைக்கும்நின் அற்புதக் கூத்தே.' | | | [இது மூவடி நேரிசை ஆசிரியச் சுரிதகம்] - சி. செ. கோ. 51 | | |
அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பாவிற்குச் செய்யுள் : |
| `பேதைமீர் ! பேதைமீர் ! பூமன்னு திசைமுகனும் புயல்வண்ணப் பண்ணவனும் காமன்னு புரந்தரனும் கடவுளரும் புடைநெருங்க இருகோட்டுக் கிடைந்த இடுகிடையவர்பல் லாண்டிசைப்ப ஒருகோட்டு மழகளிறும் இளங்கோவும் உடன்போத அம்பொன்மணி மதிற்றில்லை நடராசன் அணிமறுகில் செம்பொன்மணிப் பொலந்திண்டேர்த் திருவுலாப் போதுங்கால்' | | | [இஃது ஆறடித் தரவு] | | |