செய்யுளியல் - நூற்பா எண் 29

173

 
  `பாரித்த பேரண்டம் சிறுபண்டி கொளப்பெய்து
வாரித்தண் புனல்துஞ்சும் மாலுக்கு மால்செய்வீர்!
வேரித்தண் குழலார்கை வளைகொள்ள விழைந்தேயோ?
பூரித்து வீங்குவநும் புயமென்பார் சிலமாதர்.'

`சொன்மாலை தொடுத்தணிந்த தொண்டர்க்குத் துணைவராய்
நன்மாலைக் குழலியர்பால் நள்ளிருளில் செலவல்லீர்!
பன்மாதர் உயிர்கொள்ளல் பழியன்றே? பகைகொள்ளும்
வில்மாரன் உயிர்கொண்ட விழிக்கென்பார் சிலமாதர்.'

`அங்கமலன் முடைத்தலையே பலிக்கலனா ஐயமிடும்
மங்கையர்கள் நலங்கவர்வான் பலிக்குழலும் மாதவத்தீர்!
தங்கலர்தங் கியமும்மைப் புரமன்றே, தலையன்பின்
நங்கையர்தம் புரமுமது நகைக்கென்பார் சிலமாதர்.'
 
 

 [இவை மூன்றும் நான்கடித்தாழிசை]

 
  `அருங்கலை கவர்ந்துநீர் அளிக்கப் பெற்றநும்
இருங்கலை இனிதெமக் கென்பர் ஓர்சிலர்.'

`நன்னிறம் கவர்ந்துநீர் நல்கப் பெற்றநும்
பொன்னிறம் இனிதெனப் புகல்வர் ஓர்சிலர்.'
 
 

[பேரெண்]

 
இவை இரண்டும் நாற்சீர் ஈரடி அம்போதரங்கம்
  `தேரினை நோக்கியே திரிவர் சிற்சிலர்;
ஏரினை நோக்கியே எழுவர் சிற்சிலர்;
தாரினை நோக்கியே தளர்வர் சிற்சிலர்;
மாரினை நோக்கியே மருள்வர் சிற்சிலர்.'
 
 

[அளவெண்]

 
இவை நான்கும் நாற்சீர் ஓர்அடி அம்போதரங்கம்
  `நலனழிந்து நிற்பார் சிலர்;
நாண்துறந்து நிற்பார் சிலர்;
கலனழிந்து நிற்பார் சிலர்;
கண்கலுழ்ந்து நிற்பார் சிலர்;'
 
 

[இடைஎண்]

 
இவை முச்சீர் ஓரடி அம்போதரங்கள் 4.