செய்யுளியல் - நூற்பா எண் 29

175

 
  `கடநாக மெட்டும்,விடம் கால்நாகம் ஓரெட்டும்,
தடநாகம் அவைஎட்டும், தரித்துளபூந் துகிலொன்றும்,
உடனாக அடல்புரியும் கொடுவரியின் உடுப்பொன்றும்,
அடல்நாக அரவல்குற் கணிகலையா அசைத்தனையே.'

`வருநீலப் புயல்மலர மலர்இதழிக் கண்ணியையும்,
அருநீல முயற்களங்கம் அகன்றமதிக் கண்ணியையும்,
கருநீலக் கண்ணிஉமை செங்கைவரு கங்கையெனும்
திருநீலக் கண்ணியையும், செஞ்சடைமேல் செறித்தனையே.'
 
 

 [தாழிசை 3]

 
  `கறைவிட முகவெரி கனல்விழி யொடுமிளிர்
பிறையெயி றொடுமடல் பெறுபக டொடுமடல்
எறுழ்வலி யொடுமுரு மிடியென வருமொரு
மறலிய துயிர்கொள மலர்தரு கழலினை.'

`உலகமொ டுயிர்களு முலைதர வலம்வரும்
மலர்மகள் கொழுநனும் மகபதி முதலிய
புலவரும் அடிகளொர் புகலென முறையிட
அலைகடல் விடமுனம் அமுதுசெய் தருளினை.'

`விசையிலெம் இறைவியும் வெருவர இரசத
அசலம தசைதர அடல்புரி தசமுக
நிசிசரன் மணிமுடி நெறுநெறு நெறுவென
வசையில்பொன் மலரடி மணிவிரல் நிறுவினை.'

`இலவிதழ் மதிநுதல் இரதியொ டிரதம
துலைவற நடவிடு மொருவனும் வெருவர
அலைகட லொடுமுர சதிர்தர எதிர்தரு
சிலைமத னனையடல் செயுநுதல் விழியினை.'
 
 

[அராகம் 4]

 
  `அருவமும் உருவமும் ஆகிநின்று மவ்
வருவமும் உருவமும் அகன்று நின்றனை;'
`சொல்லொடு பொருளுமாய்த் தோன்றி நின்றுமச்
சொல்லையும் பொருளையும் துறந்து நின்றனை;'
 
 

[ஈரடி அம்போதரங்கம் 2]