176

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 
  `அந்நலம் விழைந்தவர்க்கு அறமும் ஆயினை;
பொன்னலம் விழைந்தவர் பொருளும் ஆயினை;
இன்னலம் விழைந்தவர்க் கின்பும் ஆயினை;
மெய்ந்நலம் விழைந்தவர் வீடும் ஆயினை.ழு
 
 

- [ஓரடி அம்போதரங்கம் 4]

 
  `முத்தொழிலின் வினைமுதல் நீ;
மூவர்க்கும் முழுமுதல் நீ;
எத்தொழிலும் இறந்தோய் நீ;
இறவாத தொழிலினை நீ;
இருவிசும்பின் மேயோய் நீ;
எழில்மலரின் மிசையோய் நீ;
அரவணையில் துயின்றோய் நீ;
ஆலின் கீழ் அமர்ந்தோய் நீ;
 
 

 - [முச்சீரடி அம்போதரங்கம் 8]

 
  `பெரியை நீ; சிறியை நீ; பெண்ணும் நீ; ஆணும் நீ;
அரியை நீ; எளியை நீ; அறமும் நீ; மறமும் நீ;
விண்ணும் நீ; மண்ணும் நீ; வித்தும் நீ; விளைவும் நீ;
பண்ணும் நீ; பயனும் நீ; பகையும் நீ; உறவும் நீ;
 
 

 - [இருசீரடி அம்போதரங்கம் 16]

 
 

எனவாக்கு

 
 

[தனிச்சொல்]

 
  `கற்பனை கழன்றநின் பொற்கழல் இறைஞ்சுதும்;
வெண்மதிக் கடவுள் மீமிசைத் தவழ்தரத்
தண்முகில் குழாங்கள் தாழ்வுறப் படிதலின்,
செங்கால் அன்னமும் வெண்மருப்பு ஏனமும்
கீழ்மேல் துருவ, ஆரழல் பிழம்பாய்
நின்றநின் தன்மையை உணர்த்தும்,
பொன்திகழ் புலியூர் மன்றுகிழ வோனே.ழு
 
 

 [சுரிதகம்]
 - சி. செ. கோ. 59