|
| பைந்தண் குளிரி படுத்துக் கிடத்தலும் செந்தீப் பிழம்பில் கிடத்திச் செருச்செய்வது அந்தோ கொடிதுகொடிது என்செய்தீர்? அன்னைமீர்; பொன்னஞ் சிலையே சிலையாப் புரமெய்தான் தண்ணென் கடுக்கை கொணர்ந்தாரோ? தம்மினென, மின்தந்த நுண்ணிடையாய்! எங்கோன் விரைத்தொங்கல் தன்தந்தை தாளெறிந்தாற் கன்றித்தா ரானென்மேற்கு அன்றே பகைநோக் களித்தாள்மற் றம்ம; சிறியாள் பெரும்பித் தறிந்திருந்தும், செவ்வி அறியா துரைத்தேன் அது.' | | | - சி. செ. கோ. 62 | | |
[இது செப்பல் ஓசைத்தாய் 22 அடிகளை உடையதாய் ஒரு பொருள்நுதலி வந்த கலிவெண்பா.] |
கலித்தளைதட்டுத் தனிச்சொல்லும் சுரிதகமும் பெறாது வந்த தரவு கொச்சகத்திற்குச் செய்யுள் : |
| `அடிகொண்ட குனிப்பன்றே; அரிபிரமர் முதலானோர் முடிகொண்ட தலைவணக்கின் குனிப்பெல்லாம் முறைமுறைபோய், கடிகொண்ட பொழிற்றில்லை நடராசன் கழற்காலில் குடிகொண்ட படிபோலும்; இடத்தாளில் குஞ்சிதமே.' | | | - 63 | | |
தனிச் சொல்லும் சுரிதகமும் பெற்ற தரவு கொச்சகத்திற்குச் செய்யுள் : |
| `மல்லாண்ட திரள்திண்தோள் துழாய்முதலும், மணிநாவின் சொல்லாண்ட மறைமுதலும், பலராங்குத் தொலைவெய்தப் பல்லாண்டு செலச்செல்லா இளையோரும் பனிப்பெய்த, அல்லாண்ட நள்ளிருளில் அழலாடும் தொழிலினையே,' | | | [தரவு] | | |
|
| `பல்பே ரூழி செல்லினும் அடிகட்கு ஒல்லையும் செல்லா தாகும், ஆகலின், | | |