| அளவில் காலம் அலக்கணுற் றுழலுமென் தளர்வு நோக்காய் போலும்; நோக்கின் கருணைசெய் தருளா யல்லை; அருள்நலம் பழுத்த ஆடல்வல் லோயோ.' | | | - சி. செ. கோ. 64 | | |
தரவிணைக் கொச்சகத்திற்குச் செய்யுள் : |
| `குழைதூங்கு கழைமென்தோள் கோமாரி கொலைக்கண்கள் இழைதூங்கு முலைக்கண்வைத் தேஎய்தா நாண்எய்த உழைதூங்கு குயின்ஏங்க உருமுத்தீ உகநக்கு மழைதூங்கு பொழில் தில்லை மணிமண்ணுள் நடஞ்செய்வோய்!' `மீனேற்றின் துவசத்தான் தனிதுஞ்ச விழித்தோய், நின் ஆனேற்றின் துவசமோ, அடலேற்றின் ஊர்தியோ, கானேற்ற பைங்கூழின் கவளமாக் கணத்தின்கண் வானேற்ற பகிரண்டம் வாய்மடுக்க வல்லதே.' | | | - [இரு தரவு] | | |
|
| `பைந்துழாய் மவுலிப் பண்ணவன் உவப்ப அந்தணர் பழிச்சவும் அறத்தின் புங்கவன் முனியான் முனிவன் போலும்; அனைய தன்றே, ஆன்றோர் கடனே.' | | | [சுரிதகம்] - சி. செ. கோ. 65 | | |
தரவு ஒன்றும் தாழிசை மூன்றும் இடைஇடைத் தனிச் சொல்லும் பெற்றுச் சுரிதகத்தால் இற்ற சிஃறாழிசைத் கொச்சகத்திற்குச் செய்யுள் : |
| `மறைதங்கு திருமன்றில் நடங்கண்டு மகிழ்பூத்துக் கறைதங்கு படஅரவம் இமையாது கண்விழிப்பக் குறைதங்கு கலைநிறையின் கோள்இழைக்குங் கொல்என்று நிறைதங்கு தலைஉவவு நிரம்பாது நிரப்பெய்தும் பிறைதங்கு சடைக்கற்றைப் பெரும்பற்றப் புலியூரோய்!' | | | [தரவு] | | |