செய்யுளியல் - நூற்பா எண் 29

181

 
  `கடிக்கமலப் பார்வைவைத்தும் கண்ணனார் காணாநின்
அடிக்கமலம்; முடிக்கமலம் அறியாதேம் அறிதுமே.'

`முத்தொழிலின் முதற்றொழிலோன் முடியிழந்தான் தனை இகழ்ந்த
அத்தொழிலிற் கெனில், தமியேம் அறிதொழிற்கும் வல்லமே.'

`இருக்கோல மிட்டுமின்னும் உணராதால், எந்தை! நின்
திருக்கோலம்; யாமுணர்ந்து சிந்திக்கக் கடவமே.'

`நான்மறைக்கும் துறைகண்டார் தோளிழந்தார் நாவிழந்திங்கு,
ஊன்மறைக்க மறைப்புண்டே, உய்த்துணர்வு பெரியமே.'

`தாமடிகள் மறந்துமறித் தலைகொண்டார் கலைவல்ல
மாமடிகள், யாமடிகள் மறவாமை உடையமே.'

`பலகலையும் குலமறையும் பயின்றுணர்ந்தும் பயன்கொள்ளாது
உலகலையும் சிலகலையும் உணராதேம் உணர்துமே.'
 
 

[இவை தாழிசை]

 
 

அதனால்

 
 

 [தனிச்சொல்]

 
  `அம்மநின் தன்மை எம்மனோர் உணர்தற்கு
அரிதே, எளிதே யாதல்,
பெரிதே கருணை,சிறியேம் மாட்டே.'
 
 

[சுரிதகம்] - 67

 

மயங்கிசைக் கொச்சகத்திற்குச் செய்யுள் :

  `சூல்முகத்த சுரிமுகங்கள் நிரைத்தார்ப்பத் தொடுகடல்வாய்
வான்முகத்த மழைக்குலங்கள் மறிபுனல்வாய் மடுத்தென்னக்
கான்முகத்த மதுகரத்தின் குலமீண்டிக் கடிமலர்வாய்த்
தேன்முகக்கும் பொழில்தில்லைத் திருச்சிற்றம் பலத்துறைவோய்!'

`புற்புதமும் தொலைசெய்த நிலைஎய்தாப் புலைஉடம்பின்
இற்புதவு திறந்திறவா இன்பவீ டெய்தஒரு
நற்புதவு திறந்தன்ன, நறும்பொதுவில் நங்கையுடன்
அற்புதவும் ஆனந்த நடம்பயிலும் அறவோய்!கேள்.'
 
 

[இவை இரண்டும் தரவு]