184

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 
  `ஏனை ஒன்றே,
தேவர்ப் பராஅய முன்னிலைக் கண்ணே.'
 
 

- தொ. பொ. 450

 
  `அதுவே, வண்ணகம் ஒருபோகு என இருவகைத்தே.'  
 

- 451

 
  `வண்ணகம் தானே,
தரவே தாழிசை எண்ணே வாரமென்று
அந்நால் வகையின் தோன்றும் என்ப.'
 
 

- 452

 
  `எண்இடை ஒழிதல் ஏதம் இன்றே
சின்னம் அல்லாக் காலை யான.'
 
 

- 458

 
  `தரவின் றாகித் தாழிசை பெற்றும்
தாழிசை இன்றித் தரவுடைத் தாகியும்
எண்ணிடை யிட்டுச் சின்னம் குன்றியும்
அடக்கியல் இன்றி அடிநிமிர்ந்து ஒழுகியும்
யாப்பினும் பொருளினும் வேற்றுமை உடையது
கொச்சக ஒருபோகு ஆகும் என்ப.'
 
 

- 461

 
  `அம்போ தரங்கம் அறுபதிற் றடித்தே
செம்பால் வாரம் சிறுமைக் கெல்லை.'
 
 

- 463

 
  `எருத்தே கொச்சகம் அராகம் சிற்றெண்
அடக்கியல் வாரமோ டந்நிலைக் குரித்தே.'
 
 

- 464

 
  `ஒருபொருள் நுதலிய வெள்ளடி இயலான்
திரிபின்றி வருவது கலிவெண் பாட்டே.'
 
 

- 465

 
  `தரவும் போக்கும் பாட்டிடை மிடைந்தும்
ஐஞ்சீர் அடுக்கியும் ஆறுமெய் பெற்றும்
வெண்பா இயலான் வெளிப்படத் தோன்றும்.'
 
 

- 466

 
  `பாநிலை வகையே கொச்சகக் கலியென
நூல்நவில் புலவர் நுவன்றறைந் தனரே.'
 
 

- 467

 
  `தந்துமுன் நிற்றலின் தரவே தாழிசை
ஒத்தாழ்ந் திறினஃது ஒத்தா ழிசையே.'