செய்யுளியல் - நூற்பா எண் 29

187

 
  `தாழிசைப் பின்னர் தனிச்சொல் முன்னர்
ஆழ்புனல் திரைபுரை அம்போ தரங்கம்
உம்பர் மொழிந்த தாழி சைவழி
அம்போ தரங்கம் வண்ணக மாகும்.'

`அவையே,
தேவ பாணியென்று ஏவவும் படுமே.'

`வழிபடு தெய்வம் வழுத்தி வழிமொழியின்
தலைஇடை கடையென அம்போ தரங்கம்
நிலையின் அவ் வளவின் நிலையுங் காலை
அராகம் பேரெண் இடையெண் சிற்றெண்
விராக என்ப தாழிசைப் பின்னர்
கூறிய தரவே ஆறடித் தாகும்.'

`தரவின் வழிமுறை தாழிசை மூன்றும்
வரன்முறை பிறழா நாலடிக் குரிய
தந்துமுன் நீறீஇத் தரவினில் தாழிசை
உறுப்பினும் குணத்தினும் நெறிப்படப் புணரும்.'

`தாழிசைப் பின்னர் அராகஅடி இரண்டே
அராகத் திறுதி பேரெண் இரண்டு
விராக என்ப இரண்டிரண் டடியான்
பேரெண் வழியால் இடையெண் ணாலடி
நேர வேண்டும் நெறியறி புலவர்.'

`பெற்ற நாலடி அரையடி முடிவின
சிற்றெண் பகுதி இருநான் காகும்.'

`மூவகை எண்ணின் பொருள்வகை முடிவும்
யாவகை எண்ணிற்கும் அகப்பட முடியும்.'

`சிற்றெண் அகத்தே சேர்க்கப் படுவோன்
பெற்றபுகழ் தொடுப்பினும் பிழைப்ப தில்லை.'

`அடக்கியல் உறுப்பும் ஆறடித் தாகத்
தொடுக்கு மாகின் தொல்லையோர் துணிவே.'