கலிநிலைக் கலித்துறைக்குச் செய்யுள் : |
| `யானும் தோழியும் ஆயமும் ஆடும் துறைநண்ணித் தானும் தேரும் பாகனும் வந்தென் நலனுண்டான்; தேனும் பாலும் போல்வன சொல்லிப் பிரிவானேல், கானும் புள்ளும் கைதையும் எல்லாம் கரிஅன்றே' | | | | | |
எனவும், |
கலி விருத்தத்திற்குச் செய்யுள் : |
| `வேய்தலை நீடிய வெள்ளி விலங்கலின் ஆய்தலின் ஒண்சுடர் ஆழியி னான்தமர் வாய்தலின் நின்றனர் வந்தென, மன்னன்முன் நீதலை சென்றுரை; நீள்கடை காப்போய்!' | | | - யா. கா. 34 மே. - சூளா. 127 | | |
எனவும் வரும், பிறவும் அன்ன. | (30) |
விளக்கம் |
சிதம்பரச் செய்யுட் கோவை : |
ஒருபொரு் மேல் மூன்றடுக்கிய கலித்தாழிசைக்குச் செய்யுள் : |
| `செல்லார் பொழிற்றில்லைச் சிற்றம் பலத்தெங்கள் பொல்லா மணியைப் புகழ்மினோ, வம்மின், புலவிர்காள்!' `முத்தேவர் தேவை முகிலூர்தி முன்னான புத்தேளிர் போலப் புகழ்மினோ வம்மின், புலவிர்காள்!' `ஆங்கற் பகக்கன் றளித்தருளும் தில்லைவனப் பூங்கற் பகத்தைப் புகழ்மினோ, வம்மின், புலவிர்காள்!' | | | - சி. செ. கோ. 69 | | |
| ஈற்றடிமிக்குத் தனியே வந்த கலித்தாழிசைக்குச் செய்யுள்: `இருகூற் றுருவத் திருந்தண் பொழிற்றில்லை ஒருகூற்றின் கூத்தை உணராய், மடநெஞ்சே! ஒருகூற்றின் கூத்தை உணரா யெனின்மற்றப் பொருகூற்றம் தோற்றப் புலம்பேல், வாழி, மடநெஞ்சே,' | | | - சி. செ. கோ. 70 | | |