|
இது மேல்கூறிய வஞ்சிப்பாவிற்கு இனம் ஆகிய தாழிசை துறை விருத்தங்கள் ஆமாறு கூறுகின்றது. இ-ள் : இருசீரான் ஆகிய நாலடி உடைய செய்யுள் ஒரு பொருள்மேல் மூன்றாய் வருவன வஞ்சித்தாழிசை ஆதலும், இருசீர் அடி நான்காய்த் தனியே வருவது வஞ்சித்துறை ஆதலும், முறை அமைந்த முச்சீர் அடி நான்காய் நடப்பது வஞ்சிவிருத்தம் ஆதலும், இலக்கணமாம் என்றவாறு. |
வஞ்சித்தாழிசைக்குச் செய்யுள் : |
| `மடப்பிடியை மதவேழம் தடக்கையான் வெயில்மறைக்கும் இடைச்சுரம் இறந்தார்க்கே நடக்கும்என் மனனேகாண்.' `பேடையை இரும்போத்துத் தோகையான் வெயில்மறைக்கும் காடகம் இறந்தார்க்கே ஓடும்என் மனனேகாண்' `இரும்பிடியை இகல்வேழம் பெருங்கையான் வெயில்மறைக்கும் அருஞ்சுரம் இறந்தார்க்கே விரும்பும்என் மனனேகாண்' | | | - யா. கா. 35 மே. | | |
எனவும், |
வஞ்சித் துறைக்குச் செய்யுள் : |
| `மைசிறந்தன மணிவரை கைசிறந்தன காந்தளும் பொய்சிறந்தனர் காதலர் மெய்சிறந்திலர் விளங்கிழாய்' | | | - யா. கா. 35 மே. | | |
எனவும், |