செய்யுளியல் - நூற்பா எண் 32 | 211 | | இவற்றுள் குற்றியலிகரம் வந்து முறையே ஆசிரியத்தளையும் கலித்தளையும் தட்டு வெள்ளையுள் பிறதளை விரவா என்னும் இலக்கணத்தோடு மாறுபட்டு வெண்பா அழிய நிற்றலின், ஈண்டுக் குற்றிய லிகரத்தை இவ் விலக்கணத்தான் அலகு பெறாது என்று களைய வெண்தளையாம். | | நேர் நிரை நேர் நேர் நேர் நேர் `சிறுநன்றி இன்,றிவர்க்,கியாம், செய்தக்கால் நாளைப் பெறுநன்றி பின்னும் பெரிதென் - றுறுநன்றி தானவாய்ச் செய்வதூஉம் தானமன் றென்பவே; வானவாம் உள்ளத் தவர்' | | | - யா. கா. 38 மே. | | | இதனுள் `இன்றிவர்க்கியாஞ் செய்தக்கால்' என்புழிக் குற்றிய லிகரம் வந்து வஞ்சி உரிச்சீராய் வெள்ளையுள் நிரை ஈற்று உரிச்சீர் விரவா என்னும் இலக்கணத்தோடு மாறுபட்டு வெண்பா அழிய நிற்றலின், ஈண்டுக் குற்றிய லிகரத்தை இவ்விலக்கணத்தான் அலகு பெறாது என்று களைய வெண்சீராம். | | நேர் நேர் நேர் நேர் நேர் நேர் `கொன்,று கோ, டு நீ, டு, குருதிபாயவும், சென்,று கோ, டு, நீ, டு, செழுமலைபொருவன வென்,று, கோ, டு நீ, டு, விறல்வேழம், என்,று மூ, டு, நீ, டு, பிடியுளபோலும், அதனால், இண்டிடை இரவிவண் நசைஇவரின் வண்டுண் கோதை உயிர்வா ழலளே' | | | - யா. கா. 38 மே. | &bsp; | | என இக்குறள்அடி வஞ்சிப்பாவினுள் குற்றுகரம் வந்து ஆறசைச்சீர் ஆயின, அவ்வாறு வருக என்னும் ஓத்து இலாமையால் ஆண்டுக் குற்றுகரங்களை இவ்விலக்கணத்தான் அலகுபெறா என்று களையச் சீர் சிதையாதாம். | |
|
|
|