212

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 
  `இடைநுடங்க ஈர்ங்கோதை பின்தாழ வாட்கண்
புடைபெயரப் போழ்வாய் திறந்து - கடைகடையின்
நேர் நேர்
உப்,போஒஒ, எனஉரைத்து மீள்வாள் ஒளிமுறுவற்
கொப்போநீர் வேலி உலகு'
 
 

- யா. கா. 38 மே.

 
இதனுள் உப்போஒஒ என்புழிப் பண்டமாற்றின்கண் அளபெடை வந்து கலித்தளைதட்டு
வெண்பா அழிய வந்தமையான் ஈண்டு உயிர்அளபெடையை இவ்விலக்கணத்தான் அலகு
பெறாது என்று நெட்டெழுத்தே போலக் கொண்டு அலகிடத் தளை சிதையாதாம்.
  நேர் நேர் நேர்
`பிண்,ணாக், கோஒஒ, என்னும் பிணாவின் முகத்திரண்டு
கண்நாக் குடையனபோல் கட்டுரைக்கும்; - பிண்ணாக்குக்
கொள்ளீரோ? என்பாள்தன் கூரெயிறு, காளையரை
உள்ளீர்வ போல உள'
 
 

- யா. வி. 34 மே.

 
எனவும்,
  `பல்லுக்குத் தோற்ற பனிமுல்லை; பைங்கிளிகள்
சொல்லுக்குத் தோற்றின்னம் தோற்றிலவால்;-நெல்லுக்கு
நேர் நேர் நேர்
நூ,றோஒஒ,நூ, றென்பாள் நுடங்கிடைக்கும் மென்முலைக்கும்
மாறோமா லன்றளந்த மண்'
 
 

- யா. கா. 38 மே.

 
எனவும்,
  நிரை நேர் நேர்
`களிச்,சாத்,தாஅஅ, என்றியான் கண்காண நின்று
விளித்தாலும் வாரான் விரைந்து'
 
 

- யா. வி. 4 மே.

 
எனவும் வரும்.

இவற்றுள் பண்டமாற்றின்கண்ணும் விளித்தற் கண்ணும் அளபெடைகள் வந்து
வெண்பாவினுள் நாலசைச்சீராய் வண்ணம் அறுக்குங்கால்,