| நீயும் கேண்மதி! அத்தை, வீயாது உடம்பொடு நின்ற உயிரும் இல்லை; மடங்கல் உண்மை மாயமோ அன்றே; கள்ளி வேய்ந்த முள்ளியம் புறங்காட்டு, வெள்ளில் போகிய வியலுள் ஆங்கண், உப்பிலா அவிப்புழுக்கல் கைக்கொண்டு பிறக்குநோக்காது இழிபிறிப்பினோன் ஈயப்பெற்று, நிலங்கல னாக விலங்குபலி மிசையும் இன்னா வைகல் வாரா முன்னே, செய்ந்நீ முன்னிய வினையே; முந்நீர் வரைப்பகம் முழுதுடன் துறந்தே' | | | - யா. கா. 48 மே; புறநா. 363 | | |
என வரும். இதனுள், `உப்பிலா அவிப்புழுக்கல்' எனவும் `கைக்கொண்டு பிறக்குநோக்காது' எனவும் `இழிபிறப்பினோன் ஈயப் பெற்று' எனவும் வஞ்சிஅடி மயங்கி வந்தவாறு காண்க. |
வெண்சீர் வெள்ளடி மயங்கிய ஆசிரியத்திற்குச் செய்யுள் : |
| `அங்கண் மதியம் அரவின்வாய்ப் பட்டெனப் பூசல் வாயாப் புலம்புமனைக் கலங்கி, ஏதில் மாக்களும் நோவர், தோழி, ஒன்றும் நோவார், இல்லை; தெண்கடல் சேர்ப்பர் உண்டஎன் நலக்கே' | | | - யா. கா. 41 மே. | | |
என வரும். இதனுள், |
| `அங்கண் மதியம் அரவின்வாய்ப் பட்டெனப் பொங்கிய பூசல் பெரிது' | | | | | |
என்று உச்சரித்து வெள்ளடி ஆமாறு காண்க. |
கலிஅடி மயங்கிய ஆசிரியப்பாவிற்குச் செய்யுள் : |
| `குருகுவெண் டாளி கோடுபுய்த் துண்டென மாவழங்கு பெருங்காட்டு மழகளிறு காணாது | | | | | |