| மருள்பிடி திரிதரும் சாரல் அருளான் ஆகுதல், ஆயிழை! கொடிதே.' | | | - யா. கா. 41 மே. | | |
எனவரும் இதனுள், |
| `மாவழங்கு பெருங்காட்டு மழகளிறு காணாது தீவழங்கு சுழல்விழிக்கண் சீயம்சென் றுழலுமே' | | | | | |
என்று உச்சரித்துக் கலிஅடி ஆமு£று காண்க. |
வெண்பா அடியும் ஆசிரிய அடியும் மயங்கிய கலிப்பாவிற்குச் செய்யுள் : |
| `காமர் கடும்புனல் கலந்தெம்மோ டாடுவாள்' | | | | | |
என்னும் குறிஞ்சிக்கலியான் (3) உணர்க. இம்மயங்கிசைக் கொச்சகத்துள் வெண்பா அடியும் ஆசிரிய அடியும் மயங்கிவந்தவாறு கண்டுகொள்க. |
| `நேரிழை மகளிர் உணங்குணாக் கவரும்' | | | - பட். 22 | | |
என ஆசிரிய அடியும், |
| `வயலாமைப் புழுக்குண்டு வறளடும்பின் மலர்மலைந்து' | | | - பட். 22 | | |
எனக் கலி அடியும், |
| `கோழி எறிந்த கொடுங்கால் கனங்குழை' | | | - பட். 23 | | |
|
என வெள்ளடியும் பட்டினப்பாலை என்னும் வஞ்சி நெடும்பாட்டினுள் மயங்கி வந்தவாறு காண்க. |
ஐஞ்சீர் அடியான் வந்த கலிப்பாவிற்குச் செய்யுள் : |
| `அணிகிளர் பொறிஅவிர் துத்திமா நாகத் தெருத்தேறித் துணிஇரும் பனிமுந்நீர் தொட்டுழந்து மலைந்தனையே' | | | - யா. கா. 42 மே. | | |
எனவும், |
ஐஞ்சீர் அடியான் வந்த ஆசிரியப்பாவிற்குச் செய்யுள் : |
| `உமணர்ச் சேர்ந்து கழிந்த மருங்கின் அகன்துறை ஊர்பாழ்த் தன்ன ஓமையம் பெருங்காட்டு | | | | | |
|