செய்யுளியல் - நூற்பா எண் 37

233

 

 

`ஆசிரிய நடைத்தே வஞ்சி என்ப'  
 

- தொல். பொ. 420

 
எனவும்,

 

`நெடுவெண் பாட்டே முந்நான்கு அடித்தே'  
 

 - 470

 
எனவும்,

 

`கலிவெண் பாட்டே கைக்கிளைச் செய்யுள்
செவியறி வாயுறை புறநிலை எனஇவை
தொகைநிலை வகையான் அளவில என்ப'
 
 

- 472

 
எனவும்,

 

`முடிபொருள் அல்லாது அடிஅளவு இலவே'  
 

- யா. வி. 32 மே.

 
எனவும், ஆசிரியர் தொல்காப்பியனார் பொதுவும் சிறப்பும் உடன் கூறினமையான்
அக்கருத்தே பற்றிக் கூறியவாறு என்று உணர்க.

ஈரடியான் வந்த வெண்பாவிற்குச் செய்யுள் :

 

`அறத்தா றிதுவென வேண்டா; சிவிகை
பொறுத்தானோ டூர்ந்தா னிடை.'
 
 

- யா. கா. 15 மே; குறள் 37

 
எனவும்,

மூன்று அடியான் வந்த ஆசிரியப்பாவிற்குச் செய்யுள் :

 

`முதுக்குறைந் தனளே, முதுக்குறைந் தனளே,
மலையன் ஒள்வேல் கண்ணி
முலையும் வாரா; முதுக்குறைந் தனளே.'
 
 

- யா. கா. 15 மே.

 
எனவும்,

மூன்று அடியான் வந்த வஞ்சிப்பாவிற்குச் செய்யுள் :

 

`செங்கண்மேதி கரும்புழக்கி
அங்கண்நீலத் தலரருந்தி
பொழிற்காஞ்சி நிழற்றுஞ்சும்
            செழுநீர்