|
| போகாது வழங்கும் ஆரிருள் நடுநாள், பௌவத் தன்ன பாயிருள் நீந்தி, இப்பொழுது வருகுவை ஆயின், நற்றார் மார்ப! தீண்டல்எம் கதுப்பேழு | | | - யா. கா. 43 மே. | | |
எனவும், |
நெடில் எதுகைக்குச் செய்யுள் : |
| `ஆவா என்றே அஞ்சினர் ஆழ்ந்தார் ஒருசாரார்; கூகூ என்றே கூவிளி கொண்டார் ஒருசாரார்; மாமா என்றே மாய்ந்தனர் நீந்தார் ஒருசாரார்; ஏகீர் நாய்கீர், என்செய்தும் என்றார், ஒருசாரார்ழு | | | - யா. கா. 43 மே. | | |
எனவும், |
நெடில் மோனைக்குச் செய்யுள் : |
| `ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம் ஓதலின் சிறந்தன்று ஒழுக்க முடைமைழு | | | - யா. கா. 34 மே; முதுமொழி 1 | | |
எனவும் வரும். இன எதுகை மூன்று வகைப்படும்; வல்லின எதுகையும் மெல்லின எதுகையும் இடையின எதுகையும் என. அவற்றுள், வல்லின எதுகைக்குச் செய்யுள் : |
| `தக்கார் தகவிலர் என்ப தவரவர் எச்சத்தாற் காணப் படும்ழு | | | - குறள் 114 | | |
எனவும், [ககர ஒற்றும் சகர ஒற்றும்] |
மெல்லின எதுகைச் செய்யுள் : |
| `அன்பீனும் ஆர்வ முடைமை; அதுஈனும் நண்பென்னும் நாடாச் சிறப்பு.ழு | | | - குறள் 74 | | |
எனவும், [னகர ஒற்றும் ணகர ஒற்றும்] |