|
ரகர ஆசுஇடை எதுகைக்குச் செய்யுள் : |
| `மாக்கொடி யால்நையும் மௌவல் பந்தரும் கார்க்கொடி முல்லையும் கமழ்ந்து, மல்லிகைப் பூக்கொடிப் பொதும்பரும், கான ஞாழலும், தூக்கடி கமழ்ந்து, தான் துறக்கம் ஒத்ததே' | | | - சூளா. நா. 29 | | |
எனவும், |
லகர ஆசுஇடை எதுகைக்குச் செய்யுள் : |
| `ஆவே றுருவின ஆயினும் ஆபயந்த பால்வே றுருவின அல்லவாம்; - பால்போல் ஒருதன்மைத் தாகும் அறநெறி; ஆபோல் உருவு பலகொளல் ஈங்கு' | | | - நாலடி 118 | | |
எனவும், |
ழகர ஆசுஇடை எதுகைக்குச் செய்யுள் : |
| `அந்தரத் துள்ளே அகங்கை புறங்கையாம்; மந்தரமே போலும் மனைவாழ்க்கை - மந்தரத்து வாழ்கின்றேம் என்று மகிழன்மின்; வாழ்நாளும் போகின்ற பூளையே போன்று' | | | - யா. கா. 43 மே. | | |
எனவும் வரும். |
| `ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம் ஓதலின் சிறந்தன்று ஒழுக்கம் உடைமை' | | | - முதுமொழி 1 | | |
இது ரகரஒற்று ஆசுஇடையிட்ட வல்லின எதுகை. பிறவும் வந்துழிக் காண்க. [க-த-வல்லின எதுகை] |
இடையிட்ட எதுகைக்குச் செய்யுள் : |
| `தோடார் எல்வளை நெகிழ நாளும், நெய்தல் உண்கண் பைதல கலுழ, வாடா அவ்வரி புதைஇப் பசலையும் வைகல் தோறும் பைபயப் பெருகின; நீடார் இவரென நீமனங் கொண்டார் | | | | | |