இடையின எதுகைக்குச் செய்யுள் : |
| கேளார் கொல்லோ? காதலந், தோழி ! வாடாப் பௌவம் அறமுகந் தெழிலி பருவம் பொய்யாது வலனேர்பு வளைஇ, ஓடா மலையன் வேலின் கடிது மின்னும்;இக் கார்மழைக் குரலே' | | | - யா. கா. 143 மே. | | |
என வரும். |
இரண்டடி எதுகைக்குச் செய்யுள் : |
| `துவைக்கும் துளிமுந்நீர்க் கொற்கை மகளிர் அவைப்பதம் பல்லிற்கு அழகுஒவ்வா முத்தம்; மணங்கமழ்தார் அச்சுதன் மண்காக்கும் வேலின் அணங்கும், அமுதமும், அந்நலார் பாடல்' | | | - யா. கா. 143 மே. | | |
என வரும். |
ஒன்று என முடித்தலான் இரண்டடிமோனையும் வரும்; அதற்குச் செய்யுள்: |
| `ஆகங் கண்டக ராலற்ற ஆடவர் ஆகங் கண்டகத் தாலற்ற அன்பினர், பாகங் கொண்டு பயோதரம் சேர்த்தினார்; பாகங் கொண்டு பயோதரம் நண்ணினார்' | | | - யா. கா. 43 மே. | | |
என வரும். |
மூன்றாம் எழுத்து ஒன்று எதுகைக்குச் செய்யுள் : |
| `பவழமும் பொன்னும் குவைஇய முத்தின் திகழரும் பீன்றன புன்னை' | | | - யா. கா. 43 மே. | | |
என வரும். [ழகரம் எதுகை] இங்ஙனம் ஒருசார் உயிர்எதுகை முதலாயின வருதல் உளவாயினும் பெரியதொரு சிறப்பில எனக் கொள்க. |