இடையின எதுகைக்குச் செய்யுள் : |
| மாலை தொடுத்த கோதையும் கமழ, மாலை வந்த வாடை மாயோள் இன்னுயிர்ப் புறத்திறுத் தற்றே' | | | - யா. கா. 43 மே. | | |
எனவும், [அடிதோறும் முதலெழுத்து ஒத்துவரும் அடிமோனை இடையாகுமோனை ஆயிற்று. வருக்கமோனை கடையாகுமோனை] |
கடையாகுமோனைக்குச் செய்யுள் : |
| `பகலே, பல்பூங் கானல் கிள்ளை ஓப்பியும் பாசிலைக் குளவியொடு கூதளம் விரைஇப் பின்னுப்பிணி அவிழ்ந்த நன்னெடுங் கூந்தல் பீர்ங்கப் பெய்து தேம்படத் திருகி, .........தீண்டல்எங் கதுப்பே' | | | - பக்கம் 241 | | |
எனவும் வரும். இன்னும் அதனானே விட்டிசை வல்லொற்று எதுகை என்றும் விட்டிசைமோனை என்றும் கோடலும் ஒன்று. |
விட்டிசை வல்லொற்று எதுகைக்குச் செய்யுள் : |
| `பற்றிப் பலகாலும் பால்மறி உண்ணாமை நொ-அலையல் நின்ஆட்டை நீ' | | | - யா. கா. 43 மே. | | |
[`பற் `றென வல்லொற்றால் விட்டிசைத்ததுபோல நொ என்பது விட்டிசைத்தமை காண்.] எனவும், |
விட்டிசை மோனைக்குச் செய்யுள் : |
| `அஅவனும் இஇவனும் உஉவனும் கூடியக்கால் எஎவனை வெல்லார் இகல்' | | | - யா. கா. 43 மே. | | |
[முதலெழுத்து ஒவ்வாதேனும் விட்டிசைத்தல் மாத்திரையே ஒத்தபடி] எனவும் வரும். இவை வல்லொற்று அடுத்தாற்போல விட்டிசைத்துக் குற்றெழுத்தினோடு புணர்ந்தமையான் |