248

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 
விட்டிசை வல்லொற்று எதுகையும், இரண்டடிக் கண்ணும் முதலெழுத்து விட்டிசைத்து
வந்தமையான் விட்டிசை மோனையும் ஆயின. இவை இங்ஙனம் வரினும் சிறப்பில எனக்
கொள்க.
     இன்னும் அதனானே பா இனங்கள் எல்லாத் தொடையானும் வரப்பெறுமேனும்
பெரும்பான்மையும் தலையாகு மோனையில் தீர்ந்தும் தலையாகு எதுகையில் தீர்ந்தும்
வாரா என்பதூஉம், செந்தொடை ஒழிந்த எல்லாத்தொடைக்கும் இன எழுத்து
வரத்தொடுப்பதும் வழிஎதுகை வரத்தொடுப்பதும் வழி முரண் வரத்தொடுப்பதும்
சிறப்புடைய என்பதூஉம், இன எழுத்துப் பெற்று மோனை முதலாகிய தொடையும்
தொடை விகற்பமும் போலாமை வேறுபடத் தொடுப்பது மருட் செந்தொடையாம்
என்பதூஉம் கண்டு கொள்க.

     இன எழுத்தாவன : அகர ஆகார ஐகார ஒளகாரங்களும், இகர ஈகார எகர
ஏகாரங்களும், உகர ஊகார ஒகர ஓகாரங்களும், ஞகர நகரங்களும், மகர வகரங்களும்
சகர தகரங்களும் தம்முள் இனமாம். இவற்றை அநு என்பாரும் உளர்;
  `அகரமோ டாகாரம் ஐகாரம் ஒளகான்
இகரமோ டீகாரம் எஏ; - உகரமொ(டு)
ஊகாரம் ஒஓ; ஞந,மவ, தச்சகரம்
ஆகாத அல்லா அநு'
 
 

 - யா. கா. 43 மே

 
என்ப ஆகலின்.

இன எழுத்துப் பெற்ற மருட் செந்தொடைக்குச் செய்யுள் :

  `ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்'
 
 

 - குறள் 228

 
எனவும். [ஈ - இ - இனமோனை]