செய்யுளியல் - நூற்பா எண் 39

249

 

 

`அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்'
 
 

 - குறள் 64

 
[`கண்ணுதல் காட்சி கிடைத்த விழிக்கில்லை வெல்கூற்றின் தோற்றம் கொளல்' என்பது
சிதம்பரச் செய்யுட் கோவையின் மூன்றாம் செய்யுள்.]
எனவும் வரும். பிறவும் அன்ன.

வழி எதுகைக்குச் செய்யுள் :

 

`மண்டலம் பண்டுண்ட திண்டேர்
     வரகுணன் தொண்டியின்வாய்க்
கண்டலந் தண்டுறைக் கண்டதொன்
     றுண்டு கனமகர
குண்டலம் கெண்டை இரண்டொடும்
     தொண்டையும் கொண்டொர்திங்கள்
மண்டலம் வண்டலம் பக்கொண்டல்
     தாழ வருகின்றதே'
 
 

- யா. கா. 43 மே.

 
எனவும்,

 

`கொங்கு தங்குகோதை ஓதி மாத ரோடு
     கூடும் நீடும் ஓடை நெற்றி
வெங்கண் யானை வேந்தர் போந்து, வேத கீத
     நாத ! என்று நின்று தாழ,
அங்க பூர்வம் ஆதி யாய ஆதி நூலின்
     நீதி ஓதும் ஆதி யாய
செங்கண் மாலைக் காலை மாலை சேர்நர், சேர்வர்
     சோதி சேர்ந்த சித்தி தானே'
 
 

- யா. கா. 43 மே.

 
எனவும் வரும். இதனை வடநூலார் அநுப்பிராசம் என்பர்.

வழி முரணுக்குச் செய்யுள் :

 

`செய்யவாய்ப் பசும்பொன் ஓலைச் சீறடிப் பரவை அல்குல்
ஐயநுண் மருங்குல் நோவ அடிக்கொண்ட குவவுக்கொங்கை
வெய்யவாய்த் தண்ணென் நீலம் விரிந்தென விலங்கிநீண்ட
மையவாம் மழைக்கண் கூந்தல் மகளிரை வருக என்றான்'
 
 

- சூளா. சீய. 101

 
எனவும்,