250

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 
  `ஒருமால் வரைநின் றிருசுட ரோட்டிமுந் நீர்க்கிடந்த
பெருமா நிலனுஞ் சிறுவிலைத் தாவுண்டு; பேதையர்கண்
பொருமா தவித்தொங்கல் எங்கோன் புரவலன் பூம்பொதியில்
கருமா விழிவெண்பல் செவ்வாய் பசும்பொற் கனங்குழைக்கேழு
 
 

 - யா. கா. 43 மே.

 
எனவும்,

கடை முரண் தொடைக்குச் செய்யுள் :

  `கயல்மலைப் பன்ன கண்இணை கரிதே;
தடமுலைத் திவழும் தனிவடம் வெளிதே;
நூலின் நுண்ணிடை சிறிதே;
ஆடமைத் தோளிக்கு அல்குலோ பெரிதேழு
 
 

- யா. கா. 42 மே.

 
எனவும் வரும். இஃது அடிதோறும் கடைச்சீர் மறுதலைப்படத் தொடுத்தமையால்
கடைமுரண் ஆயிற்று.

கடைஇணை முரண் தொடைக்குச் செய்யுள் :

  `மீன்தேர்ந்து வருந்திய கருங்கால் வெண்குருகு
தேனார் ஞாழல் விரிசினைக் குழூஉம்
தண்ணந் துறைவன் தவிர்ப்பவும் தவிரான்;
தேரோ காணலம்; காண்டும்.
பீரேர் வண்ணம்என் சிறுநுதல் பெரிதே.ழு
 
 

 - யா. கா. 42 மே.

 
என வரும். இஃது அடிதோறும் கடை இருசீரும் மறுதலைப்படத் தொடுத்தமையான்
கடைஇணை முரண் ஆயிற்று.

பின் முரண் தொடைக்குச் செய்யுள் :

  `சாரல் ஓங்கிய தடந்தாள் தாழை
கொய்ம்மலர் குவிந்து, தண்ணிழல் விரிந்து,
தமியம் இருந்தன மாக, நின்றுதன்
நயனுடைப் பணிமொழி நன்குபல, பயிற்றி,
வீங்கு தொடிப் பணைத்தோள் நெகிழத்
துறந்தோன், நல்லன்; எம் மேனியோ தீதே.ழு
 
 

 - யா. கா. 42 மே.

 
என வரும். இது கடைச்சீரும் இரண்டாம் சீரும் மறுதலைப்படத் தொடுத்தமையால் பின்
முரண் ஆயிற்று.