| `முதலெழுத் தொன்றி முடிவதுமோனை ஏனையது ஒன்றின் எதுகைத் தொடையே.' | | | - சிறுகாக்கை | | |
| `உறுப்பின் ஒன்றின் விகற்பமும் அப்பால் நெறிப்பட வந்தன நேரப் படுமே.' | | | - சிறுகாக்கை | | |
| `இரண்டடி எதுகை திரண்டொருங் கியன்றபின் முரண்ட எதுகை இரண்டில வரையார்.' `அகரமோ டாகாரம் ஐகாரம் ஒளவாம் இகரமோ டீகாரம் எஏ - உகரமோ டூகாரம் ஒஓ ஞநமவ தச்சகரம் ஆகாத அல்லா அநு.' `கடையிணை பின்முரண் இடைப்புணர் முரணென இவையும் கூறுப ஒருசா ரோரே.' | | | - யா. வி. 39 | | |
| `வருக்க நெடிலினம் வந்தால் எதுகையு மோனையுமென்று ஒருக்கப் பெயரான் உரைக்கப் படும்உயிர் ஆசிடையிட்டு இருக்கும் ஒருசார் இரண்டடி மூன்றாம் எழுத்தொன்றின் நிரக்கும் எதுகையென் றாலும் சிறப்பில; நேரிழையே. | | | 43 | | |
| `கருதின் கடையே, கடையிணை, பின்கடைக் கூழையுமென்று, இரணத் தொடைக்கும் மொழிவர், இடைப்புணர் என்பதுவே.' | | | - 42 | | |
| `ஏன்றா முதலள வொத்திரண் டாமெழுத் தொன்றிவரின் சான்றா ரதனை எதுகையென் றோதுவர்; தன்மைகுன்றா மூன்றாவ தொன்ற லிரண்டடி ஒன்றல் முழுதுமொன்றல் ஆன்றா இனமுயி ராசிடை யாய்வரும், ஆங்கதுவே.' | | | - வீ. சோ. 111 | | |
| `தலையாகு எதுகை தன்சீர் முழுதுறல் இடைகடை அவ்வவ் வெழுத்துஒன் றுவதே.' | | | - தொ. வி. 215 | | |
| `மூன்றாம் எழுத்தொன்றல் ஆசுஇனம் தலையாகு இடைகடை ஆறும் எதுகை வகையே.' | | | - 214 | | |