256

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 

புறநிலை வாழ்த்து மருட்பாவிற்குச் செய்யுள் :

  `தென்றல் இடைபோழ்ந்த தேனார் நறுமுல்லை
முன்றில் முகைவிரியும் முத்தநீர்த் தண்கோளூர்க்
குன்றமர்ந்த கொல்லேற்றான், நிற்காப்ப - என்றும்
தீரா நண்பின் தேவர்
சீர்சால் செல்வமொடு, பொலிமதி சிறந்தே'
 
 

- யா. கா. 36 மே.

 
எனவும்,

கைக்கிளை மருட்பாவிற்குச் செய்யுள் :

  `திருநுதல் வேர்வரும்பும்; தேங்கோதை வாடும்
இருநிலம் சேவடியும் தோயும்; - அரிபரந்த
போகிதழ் உண்கணும் இமைக்கும்;
ஆகும் மற்றிவள் அகலிடத் தணங்கே'
 
 

- பு. வெ. கை. 3 எனவும்,

 

வாயுறை வாழ்த்து மருட்பாவிற்குச் செய்யுள்:

  `பலமுறை ஓம்பப் படுவன கேண்மின் !
சொலல்முறைக்கண் தோன்றிச் சுடர்மணித்தேர் ஊர்ந்து
நிலமுறையின் ஆண்ட நிகரிலார் மாட்டும்
சிலமுறை அல்லது செவ்வங்கள் நில்லா;
விலங்கும் எறிபடையும் வீரமும் அன்பும்
கலந்ததங் கல்வியும் தோற்றமும் ஏனைப்
பொலஞ்செய் புனைகலனோ டிவ்வாறி னாலும்
விலங்கிவருங் கூற்றை விலக்கலு மாகா(து);
அனைத்தாதல் நீயிரும் காண்டிர்; - நினைத்தக்க
கூறிய மெய்மொழி பிழையாது,
தேறிநீர் ஒழுகின், சென்றுபயன் தருமே'
 
 

 - யா. கா. 36 மே.

 
எனவரும்.

செவியறிவுறூஉ மருட்பாவிற்குச் செய்யுள் :

  `பல்யானை மன்னர் முருங்க அமருழந்து,
கொல்யானைத் தேரொடும் கோட்டந்து - நல்ல
தலையாலங் கானம் பொலியத் - தொலையாப்